Skip to main content

20 லட்சம் செலவில் கரோனா தடுப்பு மருந்து உபகரணங்கள் வழங்கிய சக்கரபாணி எம்.எல்.ஏ. 

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

கரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை காப்பாற்றுவதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் அந்தந்த பகுதிகளில் உள்ள முன்னாள் அமைச்சர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் மற்றும் மாவட்ட செயலாளர்களையும் களம் இறக்கி தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பு  உபகரணங்களை வழங்க வலியுறுத்தி உள்ளார். அதுபோல் தமிழகம் முழுவதும் பொறுப்பில் உள்ளவர்களும் கரோனா தடுப்பு உபகரணங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.


திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியத்தில் இருக்கும் கள்ளிமந்தையம் ஊராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள்,  காவல்துறை அதிகாரிகள், ஒட்டன்சத்திரம், பழனி வட்டாட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர் கிராம நிர்வாக அலுவலக அதிகாரிகள், உதவியாளர்கள், பணியாளர்கள், கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோருக்கு  கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவ உபகரணங்களான கிருமிநாசினி சோப்பு, முககவசம் ஆகிய மருத்துவ உபகரணங்களை மேற்கு மாவட்ட செயலாளரும், ஒட்டன்சத்திரம்  சட்டமன்ற உறுப்பினருமான கொறடா சக்கரபாணி தனது சொந்த செலவில் வாங்கி கொடுத்தார்.

 

 

oddanchatram mla R. Sakkarapani


 
மேலும் ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனை மற்றும் தொகுதியில் உள்ள 11 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் நகராட்சி அலுவலகத்திலும், போதுமான மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளனவா என்று  சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி  ஆய்வு செய்து, மேலும் மருத்துவ உபகரணங்களை கேட்டு அதன் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்தார், அதுபோல் வெளி தொடர்பின்றி தனிமைப்படுத்தப்பட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி மற்றும் ஏ.ஏ.எஸ்.எம். பேட்டையில் உள்ள பொது மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து தருமாறு  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்திவேலை சந்தித்து  வலியுறுத்தியும்  உள்ளார்.
 

nakkheeran app



அதுபோல் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சிகள். தொப்பம்பட்டி ஒன்றியத்தில் உள்ள 38 ஊராட்சிகள், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நான்கு ஊராட்சிகள் ஆக மொத்தம் 77 ஊராட்சிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகராட்சி. கீரனூர் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு  20 லட்சம் செலவில் முககவசம், கிருமிநாசினி, சோப்பு உள்ளிட்ட மருத்துவப் பாதுகாப்பு பொருட்களை, அந்தந்த பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் மூலம் கொடுத்து, அந்தந்த பகுதியிலுள்ள பொது  மக்களுக்கு வழங்குமாறு வலியுறுத்தி உள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்