Skip to main content

பட்டமேற்படிப்பு படிக்கும் சமர்த்தான மாணவர்களுக்கு மாதம் 3100 ரூபாய் உதவித்தொகை!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

இளநிலை பட்டப்படிப்பில் முதல் இரு இடங்களைப் பிடித்து பட்டமேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் 3100 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று பல்கலை மானியக்குழு அறிவித்துள்ளது.

 

யூனிவர்சிட்டி ரேங்க் ஹோல்டர் ஸ்காலர்ஷிப்:


இளநிலை பட்டப்படிப்பில் பல்கலைக்கழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்களுக்காகவே இந்த ஸ்காலர்ஷிப் திட்டத்தை பல்கலைக்கழக மானியக்குழு கொண்டு வந்துள்ளது. இந்தியா முழுவதும் 3000 மாணவர்களுக்கு வழங்கப்படும். இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் பெற்றுள்ள ரேங்க் அடிப்படையில் உதவித்தொகை பெறுவதற்கு தேர்வு செய்யப்படுவர். அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைகளில் படித்த மாணவர்கள் ஸ்காலர்ஷிப் பெறுவதற்கு தகுதி உடையவர்கள். 30 வயதுக்குள் இருக்க வேண்டும். 


 

PG AND UG COLLEGE OR UNIVERSITY TOP  STUDENTS GET IT UNION GOVERNMENT SCHOLARSHIP APPLY


நடப்புக்கல்வி ஆண்டில் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும். மாதம் ஒன்றுக்கு ரூ. 3100 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும். தொலைநிலை முறையில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது. 


எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்:


தொழில்நுட்பப் படிப்புகளில் முதுநிலை பட்டப்படிப்பில் முதலாமாண்டு படிக்கும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு தனியே ஸ்காலர்ஷிப் வழங்குகிறது. எம்ஏ., எம்எஸ்சி., எம்காம்., எம்எஸ்டபிள்யூ, இதழியல் படிப்புகளில் சேர்ந்திருப்போர் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பிக்க முடியாது. மருத்துவயியல், பொறியியல், வேளாண்மையியல், சட்டவியல், மருந்தாளுநர் உள்ளிட்ட துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள். 

 

PG AND UG COLLEGE OR UNIVERSITY TOP  STUDENTS GET IT UNION GOVERNMENT SCHOLARSHIP APPLY




எம்இ., எம்டெக்., படிக்கும் மாணவர்கள் மாதம் 7800 ரூபாயும், பிற துறைகளில் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 4500 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை பெற விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.10.2019. மேலும் விவரங்களை, https://scholarships.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 




 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

கர்நாடக முதல்வர் சித்தராமையா போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Karnataka Chief Minister Siddaramaiah struggle

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில், ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று (23.04.2024) போராட்டம் நடத்தினர். அப்போது மத்திய அரசு மாற்றாந்தாய் போக்குடன் நடத்துகிறது என கார்நாடக அரசு சார்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது குறித்து கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், “காங்கிரஸ் கட்சி சார்பில், மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தினோம். நரேந்திர மோடியும், அமித்ஷாவும் கர்நாடக விவசாயிகளை வெறுக்கிறார்கள். கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி மத்திய அரசுக்கு வறட்சி குறித்து குறிப்பாணை (memorandum) கொடுத்தோம். பிறகு மத்திய குழு வந்தது.  அதன் பின்னர் மாநிலத்தின் 223 தாலுகாக்களில் வறட்சி நிலவி வருவதை அமித் ஷா ஆய்வு செய்தார். இதுவரை காலதாமதமாக விவசாயிகளுக்கு 650 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கியுள்ளது. கர்நாடகாவுக்கு உரிய நிவாரணம் வழங்காததற்கு நிர்மலா சீதாராமனும், நரேந்திர மோடியும் தான் காரணம்” எனத் தெரிவித்தார்.