Skip to main content

பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை

Published on 10/07/2018 | Edited on 10/07/2018
petrol

 

பெட்ரோல் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

சென்னையை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலிய கழக எண்ணெய் கிடங்கில் இருந்து, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் பெட்ரோல், டீசல் கொண்டு செல்ல தனியார் டேங்கர் லாரிகள் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படுகின்றன.

 

இந்த ஒப்பந்தம் வரும் செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டன. இந்த டெண்டரில் வங்கி உத்தரவாதத்தை  குறைக்க வேண்டும், அதிக ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூலை 9ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக சென்னை பெட்ரோலிய டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

 

இந்த வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்க கோரி இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளர் நாராயண ராவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

 

இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தபோது,  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், புது டெண்டர் விதிகள் எந்த விதத்திலும் தற்போதைய ஒப்பந்ததாரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

 

இதை ஏற்ற நீதிபதி, பெட்ரோல் டேங்கர் லாரி வேலை நிறுத்தத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும் படி, தமிழக அரசுக்கும், டி.ஜி.பி.க்கும், டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பெட்ரோல் ஊற்றிக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த நபரால் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
 person who entered the collector's office pouring petrol caused a commotion

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சாமுண்டீஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சாமுண்டீஸ்வரிக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இருவருக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தான் தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக கூறி பலமுறை சதீஷ்குமார், ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புகார் மீது எவ்விதமான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெட்ரோல் கேனை மறைத்துக் கொண்டு வந்த சதீஷ்குமார் திடீரென்று பொதுமக்கள் முன்னிலையில் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு துப்பாக்கி வடிவில் இருந்த லைட்டரைக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட மனு அளிக்க வந்த பெண்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர்.

உடனடியாக விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.