Skip to main content

முன்னாள் கைதிகள் நடத்தப்போகும் பெட்ரோல் பங்க்

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
pe

 

ஏதோ ஒரு கோபத்தில் தப்பு செய்துவிட்டு தண்டனை பெற்றுவிட்டு சிறைக்கு போய்விட்டு வந்தாலே இந்த சமூகம் அவரை ஒதுக்கிவைத்துவிடுகிறது. இதனால் அந்நபர் வேலைக்கு கூட செல்ல முடியாமல் அக்குடும்பமே தள்ளாடும் நிலைக்கு வந்துவிடுகிறது. தமிழகத்தில் இப்படி நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பொது சமூகத்தின் பார்வை சிறைக்கு சென்றவர்களை குற்றவாளியாகவே பார்க்கிறது. குற்றம் செய்தவர்கள், திருந்தி வாழ நினைத்தாலும் சமூகத்தின் ஒதுக்கலால் மீண்டும் குற்றவாழ்க்கையை தொடங்கிவிடுகிறார்கள்.

 

இதனை போக்க வேண்டும் என்பது சமூக செயல்பாட்டார்களின் நீண்டநாள் கோரிக்கை. அந்த கோரிக்கையை மிக தாமதமாக தான் தமிழக அரசு உணர்ந்தது. அதன்படி தமிழகத்தில் தண்டனை முடிந்து வெளிவரும் சிறைக்கைதிகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரும் பொருட்டு சென்னை, வேலூர், புதுக்கோட்டை, பாளையங்கோட்டை மத்திய சிறை அருகே சிறைத்துறை மூலமாக பெட்ரோல் பங்க் வைத்து நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

 


அதன்படி வேலூர் மத்திய சிறை வளாகம் அருகே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் சேர்ந்து புதியதாக பெட்ரோல் பங்க் அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளது வேலூர் மத்திய சிறை நிர்வாகம். இதற்கான ஜீ.எஸ்.டி எண், வருவாய்த்துறை அனுமதி, தீயணைப்புத்துறையின் தடையில்லா சான்று போன்றவற்றை வாங்கினர். செப்டம்பர் 6ந்தேதி மாலை வேலூர் மண்டல சிறைத்துறை தலைவர் ஜெயபாரதி தலைமையில் அதிகாரிகள் கலந்துக்கொள்ள பெட்ரோல் பங்க்குக்கான பூமி பூஜை போடப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் சிறை மீண்டவர்களுக்காக முதன் முதலாக வேலூரில் பெட்ரோல் பங்க்கு அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 


தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, வேலூர் என 9 இடங்களில் மத்திய சிறையும், 95 துணை சிறைகளும், மொத்தமாக 138 சிறைச்சாலைகள் உள்ளன. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Petrol, diesel price reduction

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவித்துள்ளார். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நாளை (15.03.2024) காலை 06:00 மணி முதல் அமலுக்கு வரும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 663 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலை மூலம் 58 லட்சத்திற்கும் அதிகமான கனரக சரக்கு வாகனங்கள், 6 கோடி கார்கள் மற்றும் 27 கோடி இருசக்கர வாகனங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு 102 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 94 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை குறைப்பை அடுத்து சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 100 ரூபாய் 75 பைசாவிற்கும், டீசல் லிட்டர் ஒன்றுக்கு 92 ரூபாய் 34 பைசாவுக்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.

முன்னதாக உலக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் என தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

பெட்ரோல் ஊற்றிக் கொண்டு ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த நபரால் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
 person who entered the collector's office pouring petrol caused a commotion

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவருக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு சாமுண்டீஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் சாமுண்டீஸ்வரிக்கும், சதீஷ்குமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் இருவருக்கான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தான் தனது மனைவியை தன்னிடம் இருந்து பிரித்து விட்டதாக கூறி பலமுறை சதீஷ்குமார், ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புகார் மீது எவ்விதமான நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பெட்ரோல் கேனை மறைத்துக் கொண்டு வந்த சதீஷ்குமார் திடீரென்று பொதுமக்கள் முன்னிலையில் தன் மீது பெட்ரோலை ஊற்றிக் கொண்டு துப்பாக்கி வடிவில் இருந்த லைட்டரைக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக் கண்ட மனு அளிக்க வந்த பெண்கள் அங்கிருந்து தலைதெறிக்க ஓடினர்.

உடனடியாக விரைந்து வந்த போலீசார் சதீஷ்குமாரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர் மீது தண்ணீரை ஊற்றி விசாரணைக்காக சிப்காட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.