Skip to main content

கரோனா ஊரடங்கு; சத்தமே இல்லாமல் உயரும் பெட்ரோல், டீசல் விலை!

Published on 19/06/2020 | Edited on 19/06/2020


கரோனா காலத்தில் தினம் தினம் உயர்ந்து வரும் வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலையின் உயர்வு பொதுமக்களின் கழுத்தை நெரித்து வருகிறது. இதனை கண்டித்து பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட முடியாத நிலமையாகி விட்டதால் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.


கடந்த 10 நாட்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து கடுமையாக உயர்த்தப்பட்டு வருகிறது. கரோனா வைரஸ் தொற்று பரவுதல் காரணமாக கடந்த மார்ச் 25 முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அது பல நிலைகளை கடந்து, தற்போது பல தளர்வுகளோடு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. 


இந்நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலையும் குறைந்துள்ளது. ஆனால் மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து கடந்த 10 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சத்தமே இல்லாமல் வரலாறு காணாத அளவில் உயர்த்தி வருகின்றனர். வாழ்விழந்து தவித்துவரும்  நடுத்தர மற்றும் கடைகோடி மக்களை மிகவும் கஷ்டபடுத்தி வருகிறது. இதனை வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும், சமுக ஆர்வளர்களும், பொதுமக்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். 


அது குறித்து வழக்கறிஞர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் கூறுகையில், "ஊரடங்கு உத்தரவு காலத்தில் பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் உயர்த்துவதற்கான காரணம் புரியவில்லை. ஆனால் சத்தமே இல்லாமல் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல்  விலைகளை உயர்த்தி வருகின்றனர். இதனால் நடுத்தர, அடிதட்டு மக்களின் இன்றைய நிலமையை புரிந்து கொள்ளாத அரசாகவே மத்திய அரசு உள்ளது.


கடந்த ஜூன் 7ம் தேதி லிட்டருக்கு ரூபாய் 76.07  என்றிருந்த பெட்ரோல் விலை ஒவ்வொரு நாளும் உயர்த்தப்பட்டு தற்போது ரூபாய் 80.37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பத்து நாட்களில் லிட்டருக்கு ரூபாய் 4.30  உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல டீசல் விலை கடந்த ஜூலை 7ஆம் தேதி லிட்டருக்கு ரூபாய் 68.74 ஆக இருந்தது.  அது படிப்படியாக உயர்த்தப்பட்டு ரூபாய் 72.69 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது பத்து நாட்களில் லிட்டருக்கு ரூபாய் 4.43 உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இது போல பத்து நாட்களில் படிப்படியாக தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்த பட்டதாக வரலாறு இல்லை.


ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வேலையின்றி, வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், அவர்களுடைய இழப்பை பற்றி சிறிதும் அக்கறை படாமல், மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் தங்களுடைய லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு மக்களின் நலனை புறந்தள்ளி விலையை உயர்த்திவருவது வேதனையளிக்கிறது. இதனை  மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு கடுமையாக கண்டிக்கிறது. உடனடியாக அரசும் எண்ணெய் நிறுவனங்களும் இந்த விலை உயர்வை வாபஸ் பெற்று பொது மக்கள் பாதிக்காத வகையில் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிலிண்டர் விலை உயர்வு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Increase in cylinder price

வர்த்தக சிலிண்டரின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை ஒன்றுக்கு 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து மொத்தமாக ரூபாய் 1960.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரங்களில் சிலிண்டரின் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு போன்ற நடவடிக்கைகளில் அரசுகள் ஈடுபடும். காரணம் தேர்தல் நேரங்களில் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு ஆகியவை மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் என்பதால் குறைப்பு நடவடிக்கைகள் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் தேதிக்கு அரசியல் கட்சிகள் காத்திருக்கும் சூழலில் சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை 23 ரூபாய் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.