Skip to main content

அமைச்சரின் கார்களுக்கு பெட்ரோல் பில் தர மறுப்பு! பல்கலைக்கழகம் அதிரடி! 

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
Petrol bill




உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கும் உயர்கல்வித்துறை உயரதிகாரிகளுக்கும் என அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐந்து கார்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த கார்களுக்கான பெட்ரோல் செலவை இதுவரை அண்ணா பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் ஏற்றிருந்தது.

 


இந்த நிலையில், பல்கலைக்கழகத்தின் வேந்தரான கவர்னர், பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிர்வாக செலவுகளையும் ஊழல்களையும் ஆய்வு செய்து வருகிறார். அனைத்து பல்கலைக்கழகத்திலும் மறைமுகமாக செலவிடப்படும் செலவு கணக்குகள் பல கோடி ரூபாய்களை தாண்டுவதாக சமீபத்தில் ராஜ்பவனின் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.

 

இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் 5 கார்கள் அமைச்சர் அன்பழகனுக்கு ஒதுக்கப்பட்டிருப்பதும், அதற்கான எரிபொருள் செலவினத்தை பல்கலைக்கழக நிர்வாகமே கொடுத்து வருவதும் கண்டறியப்பட்டு அதிர்ச்சியடைந்துள்ளது  ராஜ்பவன். 

 

இதனைத் தொடர்ந்து, அமைச்சருக்கான கார் பெட்ரோல் செலவை பல்கலைக்கழகம் ஏற்கத் தேவையில்லை என உத்தரவிட்டதன் பேரில்,  அமைச்சரின் கார் பெட்ரோல் பில்லுக்கு பணம் தரமுடியாது என  அண்ணா பல்கலைக்கழகம் மறுத்திருக்கிறது. 

 


"தற்போது பெட்ரோல் செலவினத்தை மட்டும் தர மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அமைச்சருக்கும் உயர்கல்வித்துறை அதிகாரிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கும் கார்களையும் கட் பண்ணுவதற்கு ஆலோசிக்கப்படுகிறது. காரணம், அமைச்சருக்கும் துறையின் செயலாளருக்கும் அரசு தரப்பில் கார்கள் ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் பல்கலைக்கழகம் சார்பில் எதற்கு கார்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்பதுதான்" என்கிறது பல்கலைக்கழக வட்டாரம். 

 

இந்த விவகாரம், உயர்கல்வித் துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வாம்மா மின்னல் என்பது போல ஆளுநர் இருக்கிறார்” - அமைச்சர் உதயநிதி கலகல பேச்சு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Governor is like Lightning Minister Udayanidh speech 

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் பிரகாசை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மொடக்குறிச்சி, ஒத்தக்கடை பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “வடிவேலு காமெடியில் வருவதுபோல், ‘வாம்மா மின்னல்’ என ஆளுநர் இருக்கிறார். ‘வாம்மா மின்னல்’ என்பது போல ஆளுநர் எப்போது வருவார். எப்போது போவார் என்றே தெரியாது” எனப் பேசி கூட்டத்தில் இருந்த மக்களிடம் கலகலப்பை ஏற்படுத்தினார். 

Next Story

அமைச்சரை பதவி நீக்கம் செய்ய மேற்கு வங்க ஆளுநர் வலியுறுத்தல்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
West Bengal Governor insists on dismissing the minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7,13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்ட்டி மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் 42 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அம்மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கடந்த மார்ச் மாதம் 10 ஆம் தேதி (10.03.2024) வெளியிட்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் 42 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் மம்தா பானர்ஜி அறிமுகம் செய்திருந்தார். இதனையடுத்து மம்தா பானர்ஜியும் அக்கட்சியினரும் தீவிர தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதால் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பிரத்யா பாசுவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என அம்மாநில ஆளுநர் ஆனந்த் போஸ் மேற்கு வங்க அரசை வலியுறுத்தியுள்ளார். அதே சமயம் ஆளுநர் ஆனந்த் போஸ் அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக அமைச்சர் பிரத்யா பாசு பதிலடி கொடுத்துள்ளார்.