Skip to main content

சிதம்பரம் நடராஜர் கோயில் தங்க பொற்கூரையை ஆய்வு செய்ய வலியுறுத்தல்!

Published on 24/09/2019 | Edited on 24/09/2019

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில், கடந்த 11-ந்தேதி இரண்டு தொழிலதிபர்கள் குடும்பத்திற்கு திருணம் நடத்த தீட்சிதர்கள் அனுமதி கொடுத்தனர். இதன் பேரில் ஆயிரம் கால் மண்டபத்தின் மரபுகளை மீறும் வகையில், அந்த திருமணம் நடைபெற்றது. இதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகத்திலுள்ள அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளனர். 

இதில் நடராஜர் கோயிலுக்கென்று தனிச்சட்டம் இயற்றி தமிழக அரசின் முழு கட்டுபாட்டிற்குள் கோவிலை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் மேலோங்கியுள்ளது. மேலும் பலர் மரபுகளை மீறிய தீட்சிதர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிதம்பரம் காவல் துணைக்கண்காணிப்பாளர் கார்த்தியேன் மற்றும் சார் ஆட்சியர் விசுமகாஜன் உள்ளிட்டவர்களிடம் மனு கொடுத்துள்ளனர்.


இதனைதொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரும் 27-ந்தேதி இந்த சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அதேபோல் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுநல அமைப்புகள் போராட்டம் செய்வதற்கு ஆயத்தம் ஆகி வருகிறார்கள்.

 Petition to inspect Chidambaram Natarajar Temple


இந்த நிலையில் வியக்ரபாத சிவபூஜ அன்னதான அறக்கட்டளை சார்பில் நடராஜர் கோயில் ஆயிரம் கால் மண்டபத்தில் நடைபெற்ற ஆடம்பர திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் டிஎஸ்பியிடம் மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் கோயிலின் உள்ளே மிகவும் பாதுகாப்பாக உள்ள தங்க பொற்கூரை மீது விதிகளை மீறி இரவு முழுவதும், அதன் மீது ஏறி அலங்கரம் செய்துள்ளனர். 


இதற்கு தீட்சிதர்கள் நாங்க தூங்கிய நேரத்தில் அவர்கள் பொற்கூரை மீது ஏறிவிட்டார்கள் என்று கூறியுள்ளனர். விலை மதிபெற்ற தங்க பொற்கூரை பாதுகாப்பாக உள்ளதா? அதிலுள்ள தங்கம் முழுமையாக உள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும். பொற்கூரையின் மீது சில இடங்களில் கலர் மாற்றம் உள்ளது. பொற்கூரை பாதுகாப்பில் தீட்சிதர்கள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. விலை மதிப்பற்ற தங்க பொற்கூரையை பாதுகாக்க இரவு நேரத்தில் காவல்துறையினரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.