/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/17_154.jpg)
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். ஒரு வருடத்திற்கு மேல் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவை தொடர்ச்சியாகத் தள்ளுபடி செய்திருந்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் இருந்த நிலையில் மீண்டும் செந்தில் பாலாஜி தன்னை விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கின் உத்தரவைத் தள்ளி வைக்க வேண்டும் என்று மேலும் ஒரு மனுவைத்தாக்கல் செய்திருந்தார். ஏற்கெனவே எம்.பி, எம்.எல்.ஏ.விற்கான நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருவதால் மனு மீதான விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நீதிபதி அல்லி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு வரும் 16 ஆம் தேதி பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)