Skip to main content

சலூன் கடைகளை நேரக் கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதிக்க கோரி ஆட்சியரிடம் மனு..! 

Published on 27/04/2021 | Edited on 27/04/2021

 

Petition to the Collector seeking permission to open saloon shops with time limit ..!

 

சிதம்பரம் பகுதியில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள், சிதம்பரம் சார் ஆட்சியர் மற்றும் நகராட்சி ஆணையரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “கடந்த ஊரடங்கு காலத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு, மோசமான நிலைக்குச் சென்றது. இதனால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பசி மற்றும் கடன் தொல்லையால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட நிகழ்வும் நடந்தது. தமிழக அரசு வழங்கிய ரூ. 2,000 நிவாரணம் சிலருக்கு மட்டுமே கிடைத்தது. இதில் பெரும்பாலானோருக்கு கிடைக்கவில்லை.

 

அந்தப் பொருளாதார பின்னடைவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழலில், மீண்டும் சலூன் கடைகள் அடைப்பு என்ற அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எங்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து எங்கள் வாழ்வாதாரத்திற்கு சலூன் கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டுகிறோம். கரோனா தொற்றின் வீரியத்தை நன்கு அறிவோம். நோய்த் தொற்று பரவாத வண்ணம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டும் நெறிமுறைகளை சிறப்பாக கடைபிடித்து, நோய்த் தொற்று பரவாத வண்ணம் பாதுகாப்போடு பணி செய்வோம் என்று உறுதியளிக்கிறோம். நேரக் கட்டுப்பாடுகள் விதித்து, கடைகளைத் திறந்து சலூன் கடை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்” என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாரத்தில் 4 நாட்கள் வேலை 3 நாட்கள் விடுமுறை - நாளை முதல் அமல்

Published on 31/01/2024 | Edited on 31/01/2024
Shorter working hours scheme came into force in Germany from tomorrow

உலக நாடுகள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் பொருளாதார வளர்ச்சியில் இருந்து மீள ஜெர்மனி குறைவான வேலை நேரம் என்ற முறையை கடைப்பிடிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு 4 நாட்கள் வேலை என்ற குறைவான வேலை நேரம் என்ற முறையை உலகின் வளர்ந்த நாடுகள் கூட கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த முறை மூலம் ஊழியர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியமாவதாகவும், அதன் மூலம் அவர்களது செயல்திறன் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, நெதர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 21 நாடுகளில் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் வேலை நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெர்மனியிலும் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற முறை நாளை(1.2.24) முதல் கடைப்பிடிக்கப்படவுள்ளது. மீதமுள்ள 3 நாட்கள் விடுமுறை. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஜெர்மனிய தொழிலாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்திருந்த நிலையில் நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக சோதனை முறையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டம் அடுத்த 6 மாதத்திற்கு மேற்கொள்ளப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

Next Story

‘16 வருடமாகப் பார்த்து வந்த வேலை நாளையிலிருந்து இல்லை’ - பணியாளர்கள் கவலை

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Trichy 120 sanitation workers sacked from tomorrow

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றி வரும் 120 தூய்மைப் பணியாளர்கள் நாளையுடன் வேலையை விட்டு நிறுத்தப்பட உள்ளனர். இதற்காகத் தொடர்ந்து பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தங்களுடைய வாழ்வாதாரம் இந்த தொழிலை நம்பி உள்ளதால் எங்களை வேலையில் இருந்து அகற்றக்கூடாது என வலியுறுத்தி நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

இந்நிலையில் இன்று ஸ்ரீரங்கம் ரெங்கா கோபுரம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தீர்மானித்த தினக்கூலி ரூ.678 வழங்காததைக் கண்டுகொள்ளாத கோவில் நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் இளையராஜா தலைமை தாங்கினார். சங்க மாவட்டச் செயலாளர் மாறன் கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா, வாலிபர் சங்க செயலாளர் சந்துரு, சிஐடியூ நிர்வாகிகள் சுப்ரமணி, கோவிந்தன், ரகுபதி, அன்புசெழியன், வீரமுத்து, கிருஷ்ணமூர்த்தி, முத்து, கணேசன் உள்ளிட்ட தூய்மைப் பணியாளர்கள் மொத்தம் 100க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.