Skip to main content

செல்லமகள் சோபியா..!

Published on 06/09/2018 | Edited on 06/09/2018
5TH-SOFIA


நாடு முழுமைக்கும் நாங்கள் வைத்தது தான் சட்டம் என அதிகார செருக்குடன் வலம் வந்த பா.ஜ.க.விற்கு எதிராக, "பாசிச பா.ஜ.க. ஒழிக.!" எனும் ஒற்றை வார்த்தையினைக் கேட்டு இந்தியாவிற்கே செல்ல மகளாகியிருக்கின்றார் தூத்துக்குடியை சேர்ந்த சோபியா.!

93 A/2 கந்தன் காலனி 2வது தெரு இலக்கம் கொண்ட எண்ணில் வசிக்கும் சோபியாவின் தந்தை அய்யாப்பிள்ளை சாமி எனும் A.சாமி ஓய்வுப்பெற்ற மருத்துவர்.! தாய் மனோகரி ஓய்வுப்பெற்ற செவிலியர்.! அண்ணன் கிங்க்ஸ்டன் வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர். திருமணமாகி அங்கேயே செட்டிலாகிவிட, தாயும், தந்தையும் மட்டுமே அந்த வீட்டினில் வசித்து வந்துள்ளனர். "தூத்துக்குடியில் இருக்கின்ற ஹோலிகிராஸ் கான்வெண்டில் தான் பள்ளி உயர்நிலைக் கல்வியை முடித்தார் சோபியா. அதன் பின், டெல்லியில் இளங்கலை இயற்பியல் படித்தவர் ஜெர்மனி மற்றும் கனடாவில் முதுநிலைப்பட்டமும் பயின்றுள்ளார். பின்னாளில் கனடாவிலுள்ள மான்ட்ரியோ பல்கலைகழகத்தில் எம்.எஸ்.பயின்றுள்ளார். முனைவர் பட்டத்திற்கு இணையான அந்தப் படிப்பினில் தற்பொழுது வாய்மொழித் தேர்வினை நிறைவு செய்துவிட்டு, விடுமுறைக்காக தூத்துக்குடி வந்திருக்கின்றார். வந்த இடத்தில் தான் இப்பிரச்சனை.! இன்னொன்று அவர் சிறுவயதிலிருந்தே நேர்மறையானப் போராட்ட சிந்தனையைக் கொண்டவர். இதை அவர் பொருட்டாகவே எண்ணவில்லை." என்றார் அவருடைய உறவினரான பேராசிரியர் ஒருவர்.
 

sophi


கவுண்டமணி செந்திலைப் பார்த்து கேட்பது போல், "எதுக்கு என்னையப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்டே..? எப்படி நீ பாசிச பா.ஜ.க. ஒழிகன்னு சொல்லுவே.?" என இந்த கேள்வியை பத்து தடவைக்கும் மேல் தூத்துக்குடி வாகைகுள விமான நிலைய லாபியில் இருந்த சோபியாவை கண்டு கொதித்தெழுந்து இந்தக் கேள்வியை கேட்டிருக்கின்றார் பா.ஜ.க. மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன். என்ன.? ஏது..? என அறியாமலேயே தொண்டர்களும், அவருடன் சேர்ந்து கோரஸ் பாட, அவர்களாலேயே பாசிச பா.ஜ.க. ஒழிக.! என வெளிவந்து தான் உண்மையே.!! அப்படி என்ன தான் நடந்தது..?

"சென்னை டூ தூத்துக்குடி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த தமிழிசையை பார்த்ததுமே, "இந்த விமானத்தில் தமிழிசை பயணிக்கின்றார்.! என்ன செய்யலாம்..?" என உடனடியாக டுவிட் போட்டார் சோபியா.! அதற்கு ஒருவர் விமானத்தில் இருந்து குதித்து விடு என பின்னூட்டம் போட, அருகிலிருந்த தன்னுடைய அம்மாவிடம் தமிழக, மத்திய அரசுப் பற்றி அரசியல் பேச ஆரம்பிக்க, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடுப் பற்றிய பேச்சும் வந்திருக்கின்றது. இதெல்லாம் அரசா.? மத்தியில் ஆளும் பா.ஜ.க.விற்கு தேவையா..? பாசிச பா.ஜ.க.. ஒழிக என கத்தனும் போல் இருக்கு.!" என சப்தமாகவே பேசியிருக்கின்றார் அவர். இதைக் காது கொடுத்து கேட்ட தமிழிசை அங்கு ஏதும் கேட்காமல், கீழே இறங்கியவுடன் தன்னுடைய தொண்டர் படையை வைத்துக் கொண்டு சோபியாவை வம்பு இழுத்திருக்கின்றார். மன்னிப்பு கேட்க சொன்னார்கள். அந்த பெண் மசியவில்லை. அதன் பின் கோபமடைந்து தான் பாசிச பா.ஜ.க. ஒழிகன்னு கத்துச்சு.!" என்றார் விமானத்தில் பயணம் செய்த சக பயணி.!!

முதல் நாள் இரவு 10.30 மணிவரை போலீஸ் கஸ்டடியிலேயே இருந்த மறு நாள் ஜாமீன் பெற்று வீட்டிற்கு சென்ற நிலையில், "சோபியாவின் டுவீட்டர் பக்கத்தினைப் புரட்டினால் மக்களுக்கு எதிரான, மக்களைப் பாதிப்படையக்கூடிய தூத்துக்குடி ஸ்டெர்லைட், எட்டுவழிச்சாலை, மீத்தேன் திட்டம் என தமிழக மற்றும் மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராகப் பதிவிட்டும், எதிர்வாதம் செய்யக்கூடிய கட்டுரைகளை பகிர்ந்தும், "தான் மக்களுக்காகப் போராடுபவர் தான்.!" எனும் தன்னுடைய நிலைப்பாட்டை பகிர்ந்துள்ளார். கூடுதலாக செயற்பாட்டாளர்கள் திருமுருகன் காந்தி, வளர்மதி கைதிற்கு எதிராக டுவிட்டுக்களை தட்டியவர், சமீபத்தில் பிரதமர் மோடியைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியவர்கள் என கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாகவும் டுவிட்டியிருக்கின்றார். சமூக அச்சுறுத்தலுக்கு எதிராக செயல்படும் எந்த நிகழ்வையும் விடவில்லை சோபியா.!! இதைக் காரணம் காட்டியே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்க துடிக்கின்றது மத்திய அரசு. நிகழ்விற்கு முந்தைய தினம் வரை அவர் வேறாக இருக்கலாம். இப்பொழுது அவர் எங்களது செல்ல மகள்.! "என்கின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

வாயில் சுடப்பட்டு இறந்த ஸ்னோலின் ஆவி தான் சோபியாவின் உடலில் புகுந்து பேசுகிறதோ.? என அறிவியலைத் தாண்டிய வழக்காடல்கள் உண்டு.!! எனினும், அதுவும் உண்மையாக இருந்தால் நல்லது என சிலாகிக்கின்றனர் தூத்துக்குடி மக்கள்.!!

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.