Skip to main content

ஜாமீனில் வெளிவந்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட நபர்!

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

The person who was released on bail and was involved in a series of robberies ..!

 

பெரம்பலூர் மாவட்டத்தில் சமீபநாட்களாக தொடர் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. வேப்பந்தட்டை பகுதியில் உள்ள வங்கி, துணிக்கடை, சூப்பர் மார்க்கெட் என பல இடங்களில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. அதேபோல், மங்கலமேடு பகுதியில் இரு சக்கர வாகன ஷோரூமில் கொள்ளை, அன்னமங்கலம் கிராமத்தில் ஐந்து வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை, ரஞ்சன்குடி என்ற ஊரில் இரு வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளை, அரும்பாவூர் பகுதியில் கொள்ளை எனத் தொடர் கொள்ளையினால் மாவட்டத்தில் உள்ள மக்கள் அச்சத்திலிருந்தனர். அதேநேரம் கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீசாரும் திணறி வந்தனர். இந்த நிலையில், மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர்களைப் பிடிப்பதற்காக மாவட்டம் முழுக்க கடும் சோதனை செய்யப்பட்டது.


மாவட்ட எஸ்.பி. நிஷா பார்த்திபன், டி.எஸ்.பி. சரவணன், அரும்பாவூர் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், காவலர்கள் லட்சுமணன், ஆறுமுகம் ஆகியோர் அரும்பாவூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அவர் தப்பி ஓட, அவரை போலீஸார் துரத்திச் சென்று பிடித்தனர். மேலும் பிடிபட்ட அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர், வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த 22 வயது விஜய் என்பதும் இவர் மேற்படி பகுதிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. 
 

அவரை கைது செய்த போலீசார், மேலும் விசாரணை செய்ததில் இவர் சேலம், ஆத்தூர் பகுதிகளில் தன் கைவரிசையைக் காட்டி உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர், பல மாவட்டங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வருபவர். இவர், கொள்ளை வழக்கில் சிறை சென்று தற்போது சிறையிலிருந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

 

இந்த நிலையில், பெரம்பலூர் டவுனில் உள்ள ஒரு எலக்ட்ரிக் கடையில் கொள்ளை நடந்துள்ளது. அங்குள்ள கண்காணிப்புக் கேமராவை கொண்டு போலீசார் விசாரணை செய்ததில், கணபதி என்ற திருடனை கைது செய்துள்ளனர். இப்படி தொடர் திருட்டில் ஈடுபட்ட அவர்களில் இருவரை போலீசார் கைது செய்துள்ளது பெரம்பலூர் மாவட்ட மக்களைச் சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பெரம்பலூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்” - அருண் நேரு உறுதி

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Arun Nehru assured will make Perambalur constituency role model

எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களைக் கொண்டு வந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்று திமுக வேட்பாளர் அருண் நேரு மக்களிடம் பிரச்சாரத்தின் போது உறுதியளித்தார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அமைச்சர் கே.என். நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். தொண்டர்கள், பொதுமக்கள் ஆதரவுடன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அருண் நேரு துறையூர் பகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் கிராமம் கிராமமாக சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். சென்ற இடமெல்லாம் அருண் நேருவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து திருச்சி லால்குடி தொகுதிக்குட்பட்ட புள்ளம்பாடி ஒன்றியத்தில் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வீதி வீதியாகச் சென்று திமுக அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி திமுக வேட்பாளர் அருண் நேரு வாக்கு சேகரித்தார். அப்போது பொதுமக்கள் மத்தியில் அருண் நேரு பேசுகையில், “பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் அருண் நேருவாகிய நான் உங்களில் ஒருவனாக போட்டியிடுகிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றி, இந்த பாராளுமன்ற தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தருவேன்.

மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னின்று குரல் கொடுப்பேன். மக்களுக்காக பணியாற்ற காத்திருக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வாய்ப்பு தாருங்கள்” எனப் பேசினார். பிரச்சாரத்தின் போது திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Next Story

“உங்கள் வீட்டு பிள்ளையாக செயல்படுவேன்” - அருண் நேரு உறுதி!

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
"I will act as your house son" - Arun Nehru assured

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழ்க முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்குச் சேகரிக்க உள்ளார். அந்த வகையில் இன்று (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற  பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.

முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு பேசுகையில், “லட்சக்கணக்கான தொண்டர்கள் உள்ள தி.மு.க.வில் என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு மனமாந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். திருச்சியில் நடைபெற்ற மாநாடுகளை எல்லாம் ஓரமாக நின்று பார்த்திருக்கிறேன். பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தின் மேடையில் நானும் ஒரு நாள் மைக் முன்னாள் நிற்பேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. இளைஞர்கள் பல்வேறு பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்ற அடிப்படையில் பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி இருக்கிறார்.

"I will act as your house son" - Arun Nehru assured

அதனைவிட முக்கியமாக தேர்தல் பரப்புரையை தொடங்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முதன் முதலாக எனக்கு வாக்கு கேட்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத பெருமையாக இருக்கிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் என் மீது எத்தகைய நம்பிக்கையை வைத்திருக்கிறார்களோ அதனை என் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவேன் என பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடியிருக்கும் இந்த கூட்டத்தில் உறுதியளிக்கிறேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் தமிழகம் பொற்கால ஆட்சியை கண்டிருக்கிறது. அதற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் காரணம். இந்தியாவே முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆட்சியை அண்ணாந்து பார்க்கிறது. இத்தகைய தலைவரால் அடையாளம் கட்டப்பட்ட வேட்பாளராக இங்கு பெருமையாக நிற்கிறேன். பெரம்பலூர் தொகுதிக்கு தேவையான திட்டங்களை மத்தியில் அமைய இருக்கும் இந்தியா கூட்டணி ஆட்சி மூலமாக பெற்று தருவேன். நான் உங்கள் வீட்டு பிள்ளையாக செயல்படுவேன்” எனத் தெரிவித்தார்.