Skip to main content

சி.சி.டி.வி.யில் பதிவாகமால் நகையை எடுத்துச் சென்ற நபர்..!

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

The person who took the jewelry without being recorded on CCTV ..!
                                                          மாதிரி படம் 


கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் (55 வயது) தமிழரசி. இவர், கடந்த நவம்பர் 21ஆம் தேதி, ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள தேசிய வங்கி ஒன்றில், தனது இரண்டரை பவுன் நகையை அடகு வைப்பதற்காக வரிசையில் காத்து நின்றபோது, நகையைத் தவிரவிட்டுள்ளார். 

 

அந்தப் பகுதியில் நீண்ட நேரம் தேடியும் அவரது நகை கிடைக்கவில்லை. இதையடுத்து, ஸ்ரீமுஷ்ணம் காவல்நிலையத்தில் தமிழரசி புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் ஸ்ரீமுஷ்ணம் புதிய பேருந்து நிலையம் அருகே, காவல் ஆய்வாளர் வனிதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் சேகர் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

 

அப்போது அந்த வழியே வந்த ஒரு நபர், போலீசாரை கண்டதும் பயந்து ஓட முயன்றுள்ளார். போலீசார், அவரை மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், கொல்லங்குறிச்சியைச் சேர்ந்த கதிர்வேலின் மகன் வீரப்பன் (50), தமிழரசி வங்கியில் தவறவிட்ட இரண்டரை பவுன் நகையை, யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு சென்றிக்கிறார் என்பது தெரியவந்தது. 


அந்த நகையை ஆண்டி மடத்தில் உள்ள ஒரு அடகுக் கடையில், 52 ரூபாய்க்கு அடமானம் வைத்து ஆடம்பரமாகச் செலவு செய்து வந்துள்ளார். இதை காவல்துறையினரிடம் வீரப்பன் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் அடகு வைத்திருந்த நகையை போலீசார் மீட்டதோடு வீரப்பனையும் கைது செய்துள்ளனர். வங்கியில் தவறவிட்ட தமிழரசியின் நகையை எடுத்துச் சென்று அடகு வைத்த வீரப்பனின் செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், பரபரப்பாக மக்கள் நடமாட்டம் உள்ள வங்கியில் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் தமிழரசி தவறவிட்ட நகையை வீரப்பன் கேமராவில் சிக்காமல் எப்படி எடுத்துக் கொண்டுபோனார் என்பது எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 7 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்; சென்னையில் பரபரப்பு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Rs. 7 crore worth of gold seized; Sensation in Chennai
மாதிரிப்படம்

சென்னை விமான நிலையத்திற்கு இன்று (27.03.2024) துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் என்ற விமானம் ஒன்று வந்துள்ளது. இந்த விமானத்தில் வந்தவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரள மாநிலம் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த 37 வயதான பெண் ஒருவர் தனது 14 வயது மகளுடன் வந்துள்ளார்.

இவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ரூ. 7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் லண்டனில் இருந்து துபாய் வழியாக வந்த போது கடத்தல் தங்கத்தோடு சிக்கியது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 37 வயதான அப்பெண்ணை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் நீதிமன்ற காவலில் அடைத்தனர். அண்மைக் காலத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 12 கிலோ கடத்தல் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ரூ.7 கோடி மதிப்புள்ள 11.98 கிலோ தங்கக் கட்டிகள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னை விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார்.