Skip to main content

கிராம ஊராட்சி செயலாளர் குடும்பத்தினரை கத்தியால் குத்திய நபர்…!

Published on 29/08/2020 | Edited on 29/08/2020

 

kallakuruchi

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடியை சேர்ந்தவர் மாயவன் இவர் அந்த ஊரின் ஊராட்சி செயலாளராக பணி செய்து வருகிறார். இவர் நேற்று காலை ஊராட்சி பணிகள் சம்பந்தமாக வீட்டில் இருந்து வேலைக்கு கிளம்பினார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த போதை ஆசாமி மணிகண்டன் என்பவர் மாயவனிடம் அவர் பகுதியில் உள்ள மின் டேங்கில் பல நாட்களாக குடிநீர் நிரப்பவில்லை அதை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

மாயவன் விரைவில் அதை செய்வதாக பதிலளித்துள்ளார். ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காத மணிகண்டன் மாயவனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் மணிகண்டன், தான் வைத்திருந்த சிறிய கத்தியால் மாயவனின் முகம் மற்றும் மார்பில் சரமாரியாக கிழித்துள்ளார் இதனால் மாயவன் உடம்பில் ரத்தக் கோடுகளாக  ரத்தம் வழிந்தது.

 

இதை பார்த்து பதறிப்போன மாயவன் மனைவி சரசு அவரது மகன் சஞ்சய் ஆகியோர் மணிகண்டனிடமிருந்து மாயவன் மீட்பதற்காக தடுத்துள்ளனர். அப்போது அவர்கள் மீதும் கத்தியால் கிழித்து உள்ளார் மணிகண்டன். படுகாயமடைந்த இதில் மூவருக்கும் உடம்பில் பல இடங்களில் ரத்தக் கோடுகள் ஏற்பட்டுள்ளது. 

 

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்கள் மூவரையும் மணிகண்டனிடம் இருந்து மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சையில் சேர்த்து உள்ளனர். போதையில் மூன்று பேரின் உடம்பில் கத்தியால் கண்டபடி கோடு போட்டு ரத்தக்காயம் ஏற்படுத்திய மணிகண்டன் மீது மாயவன் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மீது கத்தியால் கிழித்து காயம் ஏற்படுத்திய சம்பவம் கூத்தக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 1 கோடி பறிமுதல்; ஊராட்சித் தலைவர் மீது வழக்குப்பதிவு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Rs. 1 crore confiscation; Case registered against panchayat chairman

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் மாவட்டம் எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா வீட்டில் ரூ.1 கோடி நேற்று (12.04.2024) தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி தொடர்பாக வருமான வரித்துறை விசாரித்து வந்தனர். அதனைத் தொடர்ந்து திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1 கோடி யார் மூலம் வந்தது என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எட்டரை ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா அதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. 

Next Story

முறைகேடு புகார்; ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்!

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Complaint of malpractice Panchayat  president suspended

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் முறைகேடு புகாரில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தாமரைப்பாக்கம் கிராமத்தின் ஊராட்சி மன்றத்தலைவராக கீதா துளசிராமன் என்பவர் பதவி வகித்து வந்துள்ளார். இந்த சூழலில் சட்ட விதிகளை மீறி கட்டட வரைபடத்திற்கு அனுமதி அளித்தது தொடர்பாக அரசுக்கு நிதி இழப்பீடு செய்ததாகவும், முறைகேடாக தீர்மானங்களை நிறைவேற்றி ஊராட்சிக்கு சேர வேண்டிய நிதிகளை கால தாமதமாக செலுத்தியதாகவும் இவர் மீது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில் இவர் மீதான முறைகேடு உறுதி செய்யப்பட்டதால் கீதா துளசிராமனை பதவி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.