Skip to main content

கோவில் திருவிழாவில் சக சாமியாடி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய நபர்

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

A person who pours boiling oil on the Samiyadi at a temple festival

 

கோவில் திருவிழாவில் சாமியாடி ஒருவர் உடன் ஆடிய மற்றொரு பெண் சாமியாடியின் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பணிக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் பால்தங்கம். 48 வயதான பால்தங்கத்திற்குச் சொந்தமான குடும்பக் கோவில் அதே பகுதியில் உள்ளது. குடும்பக் கோவிலான பிரம்ம சக்தி அம்மன் கோவிலில் கடந்த சில ஆண்டுகளாகக் கொடைவிழா நடைபெற்று வருகிறது.

 

கொடைவிழாவில் பால்தங்கம் சாமியாடி மக்களுக்கு அருள்வாக்கு சொல்லுவதாகவும் கூறப்படும் நிலையில் கடந்த ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த விஜயன் என்பவர் பிரம்ம சக்தி அம்மன் கோவில் கொடை விழாவில் சாமியாடியுள்ளார். இதற்கு கோவில் நிர்வாகிகள் கடும் எதிர்ப்பினை தெரிவிக்க இது வாக்குவாதமாக மாறியுள்ளது.

 

இந்நிலையில் நேற்று நடந்த கோவில் கொடை விழாவில் கோவிலுக்குச் சென்ற விஜயன் மீண்டும் சாமி ஆடியுள்ளார். கோவிலில் பலகாரம் சுடப்பட்டுக்கொண்டிருந்த இடத்திற்கு சாமி ஆடியபடி வந்த விஜயன் கொதிக்கும் எண்ணெய்யில் கை விட்டு பலகாரங்களை எடுத்து மக்களுக்குக் கொடுத்துள்ளார். அதே சமயத்தில் பால்தங்கத்தையும் எண்ணெய்யில் கைவிட்டு பலகாரத்தை எடுத்து கொடுக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு பால்தங்கம் மறுக்கவே ஆத்திரம் அடைந்த விஜயன் கொதிக்கும் எண்ணெய்யை பால்தங்கத்தின் மேல் ஊற்றியதாகக் கூறப்படுகிறது.

 

A person who pours boiling oil on the Samiyadi at a temple festival
மாதிரி படம்

 

கொதிக்கும் எண்ணெய் பட்டதில் பால்தங்கத்தின் கைகள், முகம், கழுத்து என பல பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கிருந்த மக்கள் பால்தங்கத்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்போது தனியார் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் பால்தங்கம் சிகிச்சை பெற்று வருகிறார் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுசீந்திரம் காவல்துறையினர் விஜயனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  அதே சமயத்தில் பால்தங்கத்தின் உறவினர்கள் விஜயன் முன்விரோதம் காரணமாகத்தான் இவ்வாறு செய்தார் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.