Skip to main content

“உங்கள ஃபோட்டோ எடுக்கணும்” - அரசு அதிகாரி போல் வந்த நபர்; மோசடி செய்யப்பட்ட பெண்கள்

Published on 04/06/2023 | Edited on 04/06/2023

 

A person who comes as a government official to “take your photo”; Cheated women

 

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே உள்ள வடக்கு ராஜபுரத்தில் வசிப்பவர் ஜெயச்செல்வி(55). கடந்த 24 ஆம் தேதி இவரது வீட்டிற்கு வந்த ஒரு மர்ம நபர் தான் தாலுக்கா அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறி, அரசிடமிருந்து உதவித் தொகை கிடைக்க உங்களை புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். புகைப்படம் எடுக்கும் போது, கழுத்தில் நகை போட்டுக் கொண்டு புகைப்படத்தில் இருந்தால் உதவித் தொகை கிடைக்காது எனவே கழற்றி வைக்குமாறு கூறியுள்ளார். 

 

அதை நம்பிய ஜெயச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை கழற்றி பக்கத்தில் வைத்துவிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். செல்போன் மூலம் அவரை போட்டோ எடுத்த அந்த மர்ம நபர் அவரது கவனத்தை திசை திருப்பி நகையைத் திருடிக்கொண்டு சென்றுள்ளார். அவர் சென்ற பின் நகையைத் தேடிய பொழுது அது கிடைக்காமல் போகவே அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயச்செல்வி இது குறித்து ஓலக்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

 

இந்த நிலையில் அதே சேத்தியாதோப்பு பகுதி காட்டுக்கரை பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் மனைவி அகிலாண்டேஸ்வரி என்பவரது  வீட்டிற்கு கடந்த 12 ஆம் தேதி சென்ற அதே மர்ம நபர் அவரிடமும் வட்டாட்சியர் அலுவலகம் மூலம் உதவித் தொகை பெறுவதற்கு புகைப்படம் எடுக்க இருப்பதாக கூறியுள்ளார். அவரது காதில் அணிந்து இருந்த 4 கிராம் தோட்டை கழட்டி வைத்துவிட்டு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொல்லியுள்ளார். இதன் பின் தோட்டை கழற்றி வைத்த அகிலாண்டேஸ்வரி கவனத்தை திசை திருப்பி அந்த தோடுகளை அபகரித்துச் சென்றுள்ளார். 

 

இந்த இரு புகார்களையும் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் சிதம்பரம் அருகில் உள்ள மதுராந்தக நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஆசை குமார் என்பவரது மகன் ரங்கநாதன் என்பவர் இச்செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுபோன்று வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் முதியோர் உதவித் தொகை பெற்றுத் தர வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து வருவதாக கூறி அவர்களை நம்ப வைத்து கழுத்தில் காதில் உள்ள நகைகளை அபகரித்துச் சென்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. நகைகளை அபகரித்த ரங்கநாதனை தனிப்படை எஸ்ஐ ராஜா ஏட்டுகள் விஜயகுமார், சங்கர், ரஜினி, புகழ் மற்றும் போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

 

அப்போது முதியோர்களிடம் நகை பறித்ததை ரங்கநாதன் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். வீடுகளில் தனியாக இருக்கும் இருக்கும் வயது முதிர்ந்த முதியோர்கள் இதுபோன்ற மர்ம மனிதர்களிடம் ஏமாறக்கூடாது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.