Skip to main content

“பார்சல் கட்ட இவ்வளவு நேரமா?” - பசியில் விரலைக் கடித்து துப்பிய நபர் 

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

person who bit finger and on it when he tried parcel hotel

 

பார்சல் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஹோட்டல் முதலாளியின் விரலைக் கடித்து துப்பிய சம்பவம் கமுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலகம் முன்பு கலைச்செல்வி என்ற பெயரில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 17 ஆம் தேதியன்று, முஸ்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வழிவிட்டான் என்பவர் சாப்பாடு வாங்க வந்துள்ளார். அந்த சமயம் ஓட்டலில் கூட்டம் அலைமோதியதால் சாப்பாடு பார்சல் கட்டுவதற்கு தாமதமாகி உள்ளது. இதனிடையே, அந்த ஹோட்டலில் சாப்பாடு வாங்க வந்த வழிவிட்டான், "யோவ்... எவ்வளவு நேரம்யா இங்கேயே நிக்குறது. நமக்கு ஆயிரம் சோலி இருக்கு, சீக்கிரம் பார்சல் பண்ணி கொடுங்கய்யா” என கடிந்த குரலில் அதட்டியுள்ளார். அப்போது, மற்றவர்களுக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த கடையின் உரிமையாளர் கதிரேசன், "பொறுப்பா... எதுக்கு இவ்வளவு அவசரப்படுற கொஞ்ச நேரத்துல கட்டிக் கொடுக்குறேன்” எனக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து, வழிவிட்டானுக்கும் உரிமையாளர் கதிரேசனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வழிவிட்டான், அங்கிருந்த சாம்பார் கரண்டியை எடுத்து கதிரேசனின் தலையிலேயே சரமாரியாகத் தாக்கியுள்ளார். அப்போது, இவர்களுக்குள் மோதல் அதிகமாகவே கதிரேசனின் இடது ஆள்காட்டி விரலை கடித்து அங்கிருந்த சாக்கடையில் துப்பிய வழிவிட்டான், உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் பாதிக்கப்பட்ட கதிரேசனை உடனடியாக கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த கமுதி காவல் நிலைய போலீசார், தப்பியோடிய வழிவிட்டான் என்பவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.

 

இந்நிலையில், பார்சல் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டதால் ஹோட்டல் முதலாளியின் விரலை கடித்து துப்பிய சம்பவம் கமுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.