Skip to main content

100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக படமெடுத்த நபர் கைது... விசாரணையில் அதிர்ச்சியான போலீசார்...

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

 

சமூக வலைதளத்தில் போலியான கணக்குகளை உருவாக்கி, ஏராளமான ஆபாச படங்களை பதிவேற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவனிடம் விசாரணை நடத்தி 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் படங்களை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.

 

 Shock



பெண்கள் சிலரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பரப்பப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதுகுறித்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் செய்ததையடுத்து, இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது காஞ்சிபுரம் அடுத்த பெரிய காஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் கெய்ஷ்முகமது என்பவரை கண்காணித்தனர். மேலும் அவரது நடவடிக்கை மற்றும் சமூக வலைதள பக்கத்தை கண்காணித்தனர்.


 

 

இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள நண்பர் ஒருவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரை கைது செய்ய முடிவு செய்த போலீசார், கெய்ஷ் முகமதுவுக்கு ஏற்கனவே அறிமுகமான இளம்பெண் ஒருவர் மூலம் செல்போனில் பேச வைத்து அம்பத்தூர் தொழிற்பேட்டை பஸ் நிலையத்துக்கு வரவழைத்தனர். அங்கு மறைந்திருந்த தனிப்படை போலீசார் கெய்ஷ் முகமதுவை கைது செய்தனர்.
 

விசாரணையின்போது போலீசாரிடம், ‘ஆபாச படங்களை தொடர்ந்து பார்ப்பேன். இதனால் அனைத்து பெண்களின் புகைப்படங்களையும் மார்பிங் செய்து பேஸ்புக்கில் பதிவிட்டு பார்த்து அனுபவிப்பேன். எனது உறவினர் புகைப்படத்தையும் இதே போல் செய்தேன்.


 

 

பஸ் நிலையம், ரெயில் நிலையம் பகுதிகளில் செல்லும் பெண்களையும் பள்ளிக்கு செல்லும் மாணவிகளையும் அவர்களுக்கே தெரியாமல் படம் எடுப்பேன். பின்னர் அதனை ஆபாசமாக மாற்றி போலியான சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தேன்’ என்று கெய்ஷ் முகமது கூறியுள்ளார். உடன் பணியாற்றும் பெண்கள் மற்றும் உறவுக்கார பெண்களையே ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் இவர் பதிவேற்றம் செய்திருப்பதாக சொன்னது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 

 

இதையடுத்து அவரது செல்போனில் 100க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் படங்கள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி அழித்தனர். சமூக வலைதள பக்கத்தில் உள்ள இளம்பெண்களின் ஆபாச படத்தை அழிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போலீசாரின் விசாரணைக்குப் பிறகு கெய்ஷ் முகமது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.