Skip to main content

தொழிலதிபரை கடத்திய கும்பல்! விரைந்து மீட்ட போலீஸ்

Published on 28/06/2023 | Edited on 28/06/2023

 

Person rescued by police and arrested six

 

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மகன் ராமராஜ் (32). இவரது மனைவி ஹேமலதா. ராமராஜ் திருப்பூரில் ஜவுளி, பனியன் நிறுவனம் நடத்தி வந்தார். அப்போது சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த ராஜேஷ் (41) என்பவருடன் பனியன் வியாபாரம் செய்த வகையில் பழக்கம் ஏற்பட்டது. 

 

இந்த பழக்கத்தின் அடிப்படையில் ராமராஜ், ராஜேஷிடம் ரூ. 9 லட்சம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. அந்த தொகையை ராஜேஷுக்கு ராமராஜ் 2 வருடங்களாகத் திருப்பிக் கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இந்நிலையில், திருப்பூரில் ராமராஜ் நடத்தி வந்த பனியன் கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தில் உள்ள தனது மனைவி ஹேமலதாவின் தந்தை வீட்டில் வந்து தங்கி இருந்தார். 

 

இது பற்றிய தகவல் அறிந்த ராஜேஷ், ராமராஜை கடத்திச் சென்று மிரட்டி அவரிடம் கொடுத்த கடனை வாங்க முடிவு செய்துள்ளார். இதைத் தொடர்ந்து கடந்த 24 ஆம் தேதி கூலிப் படையினரான சென்னையைச் சேர்ந்த முஸ்தபா (28), சென்னை ஆவடியைச் சேர்ந்த கீர்த்தி (38), தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையைச் சேர்ந்த மணிகண்டன் (34), அதே பகுதியைச் சேர்ந்த வசந்த் (24), சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த இருதயராஜ் (43) ஆகிய 6 பேரும் மணிகண்டம் அருகே உள்ள தனியார் கல்லூரி முன்பு நின்று கொண்டு ராமராஜை அங்கு வரவழைத்துள்ளனர். 

 

அங்கு சென்ற ராமராஜை, ராஜேஷ் உள்ளிட்ட கூலிப்படையினர் துப்பாக்கி முனையில் காரில் கடத்திச் சென்றனர். கடன் கொடுத்தவர்கள் அழைத்ததாகக் கூறி சென்ற கணவர் இரவாகியும் வீட்டிற்கு வராததால் பதற்றம் அடைந்த ஹேமலதா, இதுகுறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தினர்.

 

பின்னர் திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மேற்பார்வையில் போலீஸார் தனசேகர், இளையராஜா ஆகியோர் ராமராஜன் செல்போன் சிக்னலை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். அந்த செல்போன் சிக்னலை வைத்து கடத்தல் கும்பல் இருந்த இடத்தை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று ராமராஜை மீட்டனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட மேற்குறிப்பிட்ட ஆறு நபர்களையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கைத்துப்பாக்கி, அரிவாள், கார் உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆவடியில் இரட்டைக் கொலை; போலீசாரிடம் சிக்கிய செல்போன்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
aavadi siddha doctor and his wife incident Cell phone caught by the police

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்துள்ள மிட்டனமல்லியில் சித்த மருத்துவர் சிவன் நாயர் என்பவரும், அவரது மனைவி பிரசன்னகுமாரி ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இத்தகைய சூழலில் அவரது இல்லத்திற்கு சிகிச்சைக்கு வருவதுபோல் நேற்று (28.04.2024) இரவு வீட்டிற்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அதன்பின்னர் சித்த மருத்துவர் சிவன் நாயரையும் அவரது மனைவி பிரசன்னகுமாரியையும் மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாராணை மேற்கொண்டனர். அப்போது இந்த இரட்டைக் கொலை நடந்த இடத்தில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேஷ் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதோடு கொலையான மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தவர்களிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கொலையாளிகள் பல லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனரா என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடி அருகே சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கழுத்து அறுத்து கொடூரக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தேவகவுடா மகன் மீது பாலியல் குற்றச்சாட்டு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Deve Gowda's son issue in karnataka 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இத்தகைய சூழலில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

Deve Gowda's son issue in karnataka 

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் அவரைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதே சமயம் இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Deve Gowda's son issue in karnataka 

இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும், முன்னாள் அமைச்சருமான எச்.டி.ரேவண்ணா மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எச்.டி.ரேவண்ணா வீட்டில் பணியாற்றும் சமையலர் அளித்த புகாரின் பேரில் ரேவண்ணா மீது பாலியல் சீண்டல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹோலேநர்சிபூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எச்.டி. ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் மீது ஏற்கெனவே பாலியல் புகார் உள்ள நிலையில் தற்போது தந்தை மீதும் பாலியல் புகார் எழுந்துள்ள சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.