Skip to main content

வனத்துறையினரிடம் சிக்கிய நாட்டு வெடி குண்டுகள் தயாரிப்பில் ஈடுபட்ட நபர்!!

Published on 16/09/2020 | Edited on 16/09/2020

 

The person involved in the production of country bombs caught by the forest department.

 

 

கோவை மண்டல கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கோவை மாவட்ட வன அலுவலர் ஆகியோர்களின் உத்தரவின்பேரில், கோவை வனக் கோட்டத்தில் காப்புக்காடுகளுக்கு வெளியே பட்டா நிலங்களில் அவுட் காய் என்ற பழங்கள் மற்றும் மாமிசப் பொருட்களில் வைக்கப்படும் சிறு அளவிலான நாட்டு வெடி குண்டுகளை கொண்டு வன விலங்குகளை வேட்டையாடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

 

இந்த நிலையில் இம்மாதிரியான நாட்டு குண்டு தயாரிப்பில் வெள்ளியங்காட்டை சேர்ந்த மூர்த்தி என்பவர் ஈடுபடுகிறார் என்கிற ரகசிய தகவல் வனத்துறையினருக்கு கிடைத்தது. அதன்பேரில்  சம்மந்தப்பட்ட நபரை பிடிக்கப் பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை சரகர்கள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய தனி குழு தீவிரமாக கண்காணிக்கப்பில் ஈடுபட்டவந்தனர்.

 

இந்த நிலையில் சீலியூர் பேருந்து நிறுத்தம் அருகே மூர்த்தி (48) என்பவரை வன அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்‌. அவரது வீட்டில் சோதனை செய்ததில் ஏர்கன் மற்றும் நாட்டு வெடி குண்டு செய்வதற்கு தேவைப்படும் வெள்ளை நிற வெடிமருந்து மற்றும் கரி மருந்து மூலப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் வன அதிகாரிகள், அவர் மீது மேல் நடவடிக்கை தொடர காவல்துறை வசம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 


மேலும், அவுட் காய் மற்றும் மாமிசப் பொருட்களில் வைக்கப்படும் சிறு அளவிலான நாட்டு வெடி குண்டு தயாரிப்பில் ஈடுபடும் நபர்களை பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக மாவட்ட வன அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும் என வனத்துறையினர் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இரவில் வெளியே வர வேண்டாம்'-அரியலூர் மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
 'Don't come out at night'-Admonition to people of Ariyalur

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

அரியலூரில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் இரவு நேரங்களில் தனியாக செல்வதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ஆனிமேரி ரஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வனத்துறை மருத்துவர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலில், அரியலூர் மாவட்டத்தில் நடமாடும் சிறுத்தை, எலி, தவளை, நத்தை, மான், மயில் உள்ளிட்ட பறவைகளை  உண்ணக்கூடியது. இந்த நடமாடும் சிறுத்தைக்கு மற்ற உயிரினங்களைத் தாக்கும் எண்ணம் இல்லை. வளர்ப்பு பிராணிகளைச் சீண்டாத சிறுத்தை மனிதர்களிடம் பயந்த சுபாவம் கொண்டிருக்கும். அரியலூரில் நடமாடும் சிறுத்தை ஏலகிரி மலைக்கோ அல்லது அருகில் உள்ள பச்சை மலைக்கோ செல்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.