Skip to main content

மனைவியுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த காவலர்.. ஆணையரிடம் புகார் கொடுத்த கணவர்..! 

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Person gave Complaint on PC Chennai police Commissioner office


நக்கீரன் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு பேசிய நபர் ஒருவர், "தன் குடும்ப வாழ்க்கையே ஒரு போலீஸ்காரரால் பாழாய் போனது" என்றார். தன் மனைவியுடன் அந்த காவலர் தனிமையில் இருந்தபோது எடுத்த ஆபாச படங்களை ஷோசியல் மீடியாவில் போடுவேன் என்றும், இதை தவிர்க வேண்டும் என்றால் பத்து லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் கேட்டு மிரட்டுகிறார் என்றார். 

 

பாதிக்கப்பட்டவரை நேரில் சந்தித்தோம், "என் பெயர் ஜெயபிரகாஷ், சென்னை மண்ணடியில் கூரியர் தொழில் செய்கிறேன். 2002ம் வருஷம் என் மனைவியை காதல் திருமணம் செய்தேன். 19 வயசுல மகன் இருக்கான். என்னோட கூரியர் ஆபீஸ் முத்தியால்பேட்டை காவல்நிலையம் எதிரே இருக்கு. கடந்த சில வருசமா என் மனைவியும் கூரியர் ஆபீசை கவனித்து வந்தார்.  இந்நிலையில் கடத்த ஜூன் 6ம் தேதியன்று என் மனைவி அளவுக்கதிகமான தூக்க மாத்திரையை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை ஒருவழியாக காப்பாற்றிவிட்டேன். எந்தப் பிரச்னையும் குடும்பத்தில் இல்லாதபோது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை என் மனைவியிடம் கேட்டேன். 

 

அதற்கு என் மனைவி, "முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளரின் ஓட்டுநரான கான்ஸ்டெபில் பெஞ்சமின் பிராங்க்ளின் உடன் தொடர்பு ஏற்பட்டது. அவர் என்னுடன் பல முறை தனிமையில் இருந்தார். என்னை ஆபாச வீடியோ எடுத்து வைச்சிக்கிட்டு மிரட்டி வீட்டில இருந்த மூனு லட்சம் ரூபாய், மூன்று சவரன் நகை, மற்றும் காஸ்லி மொபைல் போன் எல்லாத்தையும் பிடிங்கி கொண்டார். தொடர்து பணம் கேட்டு மிரட்டி வருகிறார். பணம் தர்லனா என்னோட ஆபாச வீடியோவை ஷோசீயல் மீடியாவுல போட்டு விடுவேன் என்று மிரட்டுகிறார்” என்று என்னிடம் சொன்னார்.

 

இது சம்மந்தமா புகார் கொடுக்க முயன்ற போது, பெஞ்சமின் பிராங்க்ளின், என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார். பின்னர் இது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் புகாரை வாங்கவில்லை. மாறாக என் மீதே வழக்கு போடுவேன் என்று மிரட்டினார்கள். இந்த நேரத்தில் என் மனைவி மீது எனக்கு சந்தேகம் தோன்றியது. எனது மனைவியின் செல்போனை பார்த்த போது போலீஸ்காரர் பெஞ்சமினிடம் அடிக்கடி போனில் பேசிவந்ததும், அதே போல வாட்ஸ் ஆப்பில் இருவரும் சேர்ந்து எடுத்த அந்தரங்க புகைப்படங்களையும் பார்த்து அதிர்ச்சி அடைதேன். இது தொடர்பாக என் மனைவியிடம் கேட்டதற்கு இருவருக்கும் இடையே கருந்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக போலீஸ்காரர் பெஞ்சமின் பிராங்கிளினிடம் கேட்டதற்கு, என்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். மேலும் என் மனைவியின் அந்தரங்க புகைபடங்கள், வீடியோகளை வெளியிடாமல் இருக்க பத்து லட்சம் ரூபாய் தரும்படி மிரட்டி வருகிறார். இந்தநிலையில் போலீஸ்காரர் பெஞ்சமினுடன் சேர்ந்து கொண்டு என் மனைவி, என்னை எந்த நேரமும் கொலை செய்ய வாய்ப்பு இருக்கிறது. இதுதொடர்பாக காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளேன்” என்று தெரிவித்தார். மேலும், பெஞ்சமினுடன் இருக்கும் சில புகைப்படத்தையும் ஆதாரமாக காட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக காவலர் பெஞ்சமின் பிரங்கிளினை தொடர்பு கொண்டோம் போனை எடுக்கவில்லை.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

2024 ஆம் ஆண்டிற்கான விசிக விருதுகள் அறிவிப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
2024 Vck Awards Announcement!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் மற்றும் இந்திய அளவில் ஆண்டுதோறும் பல்வேறு தளங்களில் சாதனைகள் படைத்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது சமூகம், அரசியல், பண்பாடு, கலை-இலக்கியம் போன்ற தளங்களில் சீரிய முறையில் தொண்டாற்றுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு ஆளுமையினருக்கு, “அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, காமராசர் கதிர், அயோத்திதாசர் ஆதவன், காயிதேமில்லத் பிறை மற்றும் செம்மொழி ஞாயிறு” ஆகிய விருதுகள் 2007 முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டு முதல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மேனாள் கர்நாடக முதலமைச்சர் சித்தாரமையா, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, எழுத்தாளர் அருந்ததி ராய், தோழர் து.ராஜா, இலக்கியச் செல்வர் குமரிஅனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், சொல்லின் செல்வர் ஆ.சக்திதாசன், பாவலர் வை.பாலசுந்தரம், பேராசிரியர் காதர்மொய்தீன், பேராசிரியர் ஜவாஹிருல்லா, ஏ.எஸ். பொன்னம்மாள், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்ளிட்டோருக்கு  இதுவரை விசிக விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான விசிக - விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் அம்பேத்கர் சுடர் விருது - நடிகர் பிரகாஷ்ராஜ், பெரியார் ஒளி விருது - வழக்கறிஞரும், திராவிடர் கழக பிரச்சாரச் செயலாளருமான அருள்மொழி, மார்க்ஸ் மாமணி விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், காமராசர் கதிர் விருது - இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம், அயோத்திதாசர் ஆதவன் விருது - பேராசிரியர் ராஜ்கௌதமன், காயிதேமில்லத் பிறை விருது - வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவர்  எஸ்.என். சிக்கந்தர், செம்மொழி ஞாயிறு விருது - கல்வெட்டியலறிஞர் எ. சுப்பராயலுவுக்கும் வழங்கப்பட உள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா மே 25 ஆம் தேதி (25.05.2024) சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெளியிட்டுள்ளார். 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.