/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/covai.jpg)
கோவை மாவட்டம் காருண்யா காவல் நிலைய சரகம் 29.9.2018 ஆம் தேதி சாடிவயல் சின்னாறு பாலம் அருகில் சாக்கு மூட்டையை 6 பேர் தூக்கிக்கொண்டு சென்றிருந்தார்.
அவரை வனத்துறையினர் பார்த்தபோது ஓடினர். ஒருவரை விரட்டிப் பிடித்தபோது, கேரள மாநிலத்திற்கு சாக்கு மூட்டையில் சுமார் 60 கிலோ சந்தன கட்டைகளை துண்டுகளாக வெட்டி மூட்டைகளில் கட்டிக் கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.
வனத்துறையினர் பார்த்து விரட்டியபோது ஐந்து நபர்கள் ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரின் பெயர் ராமன் என்றும், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது. பூலாம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் வைத்து போலுவாம்பட்டி வனச்சரகர் பழனிவேல் ராஜன் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)