Advertisment

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஒருவர் கைது- ஈரோட்டில் பரபரப்பு

A person arrested for being in touch with a organization - excitement in Erode

Advertisment

ஐ.எஸ்.ஐ பயங்கரவாத அமைப்புடன் நேரடித் தொடர்பிலிருந்த சாதிக் பாட்ஷா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், சாதிக் பாட்ஷாவிற்கும் அவரது கூட்டாளிகளுக்கும் தொடர்புடைய 9 இடங்களில் இன்று என்.ஐ.ஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை நடத்தியிருந்தது.

தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் என்.ஐ.ஏசோதனை நடத்தி வரும் நிலையில், ஈரோடு மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கி இருந்த ஒருவரை என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக ஆசிஃப் என்பவர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இந்த கைது நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

incident NIA Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe