Skip to main content

மருந்தகங்களில் குவியும் மது அருந்துவோர்கள்..? 

Published on 28/05/2021 | Edited on 28/05/2021
person Accumulating alcohol are crowded in pharmacies

 

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகள் முற்றிலும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுவுக்கு அடிமையான மது குடிப்போர்கள் குடிப்பதற்கு மது கிடைக்காமல் போதை இல்லாமலேயே தள்ளாடுகிறார்கள். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல போதை ஏறுவதற்கு எதை குடிக்கலாம் என மூளையைக் கசக்கிக் கொள்கிறார்கள். அதன் விளைவாக தற்போது தமிழகமெங்கும் ஹோட்டல்கள், மருந்துக்கடைகள் போன்றவை மட்டுமே திறந்துள்ளது.

 

அப்படிப் மருந்துக்கடைகளில் இருமலுக்கு டாக்டர்கள் பரிந்துரையின் பெயரில் கொடுக்கப்படும் சிரப்பு மருந்து பாட்டில்களை வாங்கிக் குடிக்க ஆரம்பித்துள்ளனர் மது அருந்துவோர். இருமல் சம்பந்தமான நோய்களுக்கு டாக்டர்கள் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யும் மருந்து பாட்டில்களில் இருக்கும் அந்த மருந்தில் குறிப்பிட்ட அளவு ஆல்கஹால் கலந்திருக்கும். அதற்கு காரணம் மருந்து குறிப்பிட்ட காலம் வரை  கெட்டுப்போகாமல் இருப்பதற்காக  ஆல்கஹால்  கலப்பது  உண்டு. அப்படிப்பட்ட இந்த மருந்தை 5 மில்லி 10 மில்லி வரை மட்டுமே நோயாளிகள் காலை, மாலை குடிக்க வேண்டும் சிறுவர்கள் குழந்தைகளுக்கு இன்னும் அளவை குறைத்துக் கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுவார்கள்.

 

person Accumulating alcohol are crowded in pharmacies

 

அப்படிப்பட்ட இந்த இருமல் மருந்தில் ஆல்கஹால் கலந்திருப்பதால் அதிக அளவில் குடித்தால் மயக்கம் கலந்த போதை வரும் என்பதால் குழந்தைகள் முதல் சிறுவர்கள், பெரியவர்கள் வரை இதற்கென்று அளவை வரைமுறை செய்து பரிந்துரை செய்வார்கள். அதன்படி மருந்து கடைகளில் வாங்கி நோயாளிகள் குடிப்பது வழக்கம். இதில் உள்ள ஆல்கஹால் போதை தரும் என்பதை புரிந்து கொண்ட மது குடிப்போர்கள், இப்போது அதை வாங்க மருந்துக்கடைகளில் முற்றுகையை இடுகின்றனர் என்ற தகவல் பரவலாக வெளிவந்துள்ளது. மேலும் மது பாட்டில்கள் விலை அதிகம், இருமல் சிரப்பு மருந்துகள் விலை குறைவு எனவே குறைவான விலையில் நிறைவான போதை கிடைக்கும் என்பதால் மது அருந்துவோர் இருமல் மருந்துகளை குடிக்கும் நிலை அதிகரித்துள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

 

இதை அதிக அளவில் குடிப்பதன் மூலம் கல்லீரல், சிறுநீரகம் பாதிக்கும் நரம்பு தளர்ச்சி ஏற்படும். எனவே மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் இதுபோன்ற இருமல் சிரப்பு மருந்துகள் வெளி நபர்கள் விற்பனை செய்யக்கூடாது. அப்படி விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். அதை மீறி விற்பனை செய்யும் மருந்துகடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கரோனா நோய் விலைமதிப்பற்ற மனித உயிர்களை பறித்து வருகிறது. அதிலிருந்து தப்பிக்க வழிதேடும் மக்கள் ஒரு பக்கம், போதை காரணமாக தங்கள் இறப்பை தாங்களே தேடிச்செல்லும் மது அருந்துவோர்கள் மறுபக்கம். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

குடிப்பழக்கத்தை தட்டிக்கேட்ட பாட்டியை கொன்ற பேரன்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Grandson attack grandmother for drunkenness

குடிப்பழக்கத்தை கண்டித்த பாட்டியை பேரனே கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ளது சாரூர். இந்த பகுதியில் வசித்து வந்தவர் தாசம்மாள் (80). இவருடைய மகன் புஷ்பராஜ் என்பவருக்கு அஜித் மகன் இருக்கிறார். அவருக்கு வயது 23.

குடும்ப பிரச்சனை காரணமாக புஷ்பராஜின் மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் புஷ்பராஜூம் அவருடைய மகன் அஜித்தும் தாசம்மாளுடன் வசித்து வந்தனர். அண்மையில் உடல்நிலை சரியில்லாமல் புஷ்பரஜ் இறந்து விட்டார் .

அதன் பிறகு பாட்டியுடன் அஜித் மட்டும் வசித்து வந்தார். அந்த பகுதியில் பெயிண்டிங் வேலைகளுக்கு சென்று வந்த அஜித் குடிப்பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையாகி விட்டார். இந்நிலையில் பாட்டி  தாசம்மாள் பெயரில் உள்ள 15 சென்ட் நிலத்தை தன்னுடைய பெயருக்கு எழுதி வைக்கும்படி அஜித் மது அருந்திவிட்டு ரகளை செய்து வந்துள்ளார்.

வழக்கம்போல் நேற்று இரவு 11 மணிக்கு மது குடித்துவிட்டு வந்த அஜித் பாட்டி தாசதாசம்மாளிடம் இது தொடர்பாக சண்டை போட்டுள்ளார். அப்பொழுது பாட்டி தட்டி கேட்டுள்ளார். மதுபோதையில் இருந்த அஜித் தாசம்மாளை கீழே தள்ள, சுவரில் தலை மோதி சம்பவ இடத்திலேயே தாசம்மாள் உயிரிழந்தார். தான் தாக்கியதால் பாட்டி இறந்ததை அறிந்துகொண்ட அஜித் பயத்தில் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கன்னியாகுமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.