Skip to main content

சீன பால் பொருட்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் - மத்திய அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள்

Published on 18/06/2018 | Edited on 18/06/2018
milk

 

சீன பால் பொருட்களுக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் விடுத்துள்ள அறிக்கை:

’’கடந்த 2008ம் ஆண்டு சீனாவில் ஆயிரக்கணக்கான குழந்தைகளின் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் சீனாவில் தயாராகும் பால் மற்றும் பாலில் இருந்து தயாரிக்கப்படும் பால் பொருட்களில் "மெலமைன்" என்கிற நச்சுப் பொருள் கலக்கப்பட்டிருப்பதும், அந்த ரசாயனம் கலக்கப்பட்ட பால், பால் சார்ந்த இனிப்பு பொருட்களை சாப்பிட்ட சுமார் 53ஆயிரம் குழந்தைகளின்  உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது.

 

"பிளாஸ்டிக் மற்றும் உரங்களில் கலக்கப்படும்" வேதிப் பொருளான "மெலமைன்" கலக்கப்பட்ட பால் மற்றும் பால் சார்ந்த இனிப்பு வகைகளை உட்கொள்ளும் குழந்தைகளின் சிறுநீரகம் கடுமையாக பாதிக்கப்பட்டு, அவை செயலிழந்து போய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சீனாவின் பால் மற்றும் பால் பொருட்களை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 3மாதங்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டதோடு அதனை உடனடியாக அமுலுக்கு கொண்டு வருவதாக "ம‌த்‌திய வ‌ர்‌த்தக‌ம் ம‌ற்று‌ம் தொ‌‌ழி‌ல்துறை அமை‌ச்சக‌‌த்‌தி‌ன், அயலுறவு வ‌ர்‌த்தக பொது இய‌க்குனரக‌ம் (DGFT) ‌சார்பில் விடு‌த்த செ‌ய்‌தி‌க் குற‌ி‌ப்‌பி‌ல் அப்போது தெரிவிக்கப்பட்டது. 

 

அதன் பின்னர் சீன பால் பொருட்கள் மீதான தடையானது அவ்வப்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டு வந்தது. கடைசியாக ஜூன் 2018 வரை சீன பால் பொருட்­க­ளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய தடை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடையை மேலும் 6மாத காலத்திற்கு அதாவது 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிற தகவல் "இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையத்தின் 13.06.2018 தேதியிட்ட கடிதம்" வாயிலாக தெரிய வருகிறது.

 

உயிருக்கு தீங்கிழைக்கும் சீன பால் பொருட்கள் மீதான தடையை நீட்டித்து உத்தரவிட்டுள்ள மத்திய அரசின் உத்தரவை "தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்" சார்பில் மனதார வரவேற்கிறோம்.

 

மேலும் ஆண்டுக்கு சுமார் 150கோடி டன் பால் உற்பத்தி செய்து பால் உற்பத்தியில் உலகில் இந்தியா அசைக்க முடியாத முதலிடத்தில் இருக்கும் போது சீன பால் பொருட்கள் மீதான தடையை அவ்வப்போது கால நீட்டிப்பு செய்யாமல் இந்தியாவில் இறக்குமதி செய்ய நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசையும், பாரத பிரதமர் அவர்களையும், ம‌த்‌திய வ‌ர்‌த்தக‌ம் ம‌ற்று‌ம் தொ‌‌ழி‌ல்துறை அமை‌ச்சர் அவர்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.’’


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

உளவு பார்ப்பதாக கைதான புறா; 8 மாதங்களுக்குப் பின் விடுவிப்பு!

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Pigeon arrested for spying and Released after 8 months

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைகள் தொடர்பான பிரச்சனை தொடர்ந்து பூதாகரமாகி வருகிறது. அண்மையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்க்கும் இது குறித்து பேசியுள்ளதாக கூறப்பட்டது. இதனிடையே, சீனா, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 பகுதிகளின் பெயர்களை மாற்றியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சீனா கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அருணாச்சலப் பிரதேசத்தை அந்நாட்டுடன் சேர்த்து வரைபடத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்படி மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், சீனாவில் இருந்து நம் நாட்டை உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட புறாவை 8 மாதங்கள் சிறையில் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே பிர் பாவ் ஜெட்டி பகுதியில், கடந்த 2022 ஆண்டு மே மாதம் வித்தியாசமாக இருந்த புறா ஒன்று பிடிப்பட்டது. அந்த புறாவின் கால்களில் தாமிரம் மற்றும் அலுமினியத்திலுமான இரண்டு மோதிரங்கள் இருந்தன. மேலும், அந்த புறாவின் இரண்டு இறக்கையின் கீழ் பகுதியில் சீனா மொழியில் எழுதப்பட்ட செய்தி இருந்ததாக கூறப்படுகிறது. 

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், சீனாவில் இருந்து உளவு பார்ப்பதற்காக புறா வந்திருப்பதாக சந்தேகமடைந்தனர். இதனையடுத்து, இது தொடர்பாக ஆர்சிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த புறா சீனாவில் இருந்து அனுப்பப்பட்டதா? என விசாரணை நடத்தி வந்தனர். மேலும், பிடிப்பட்ட புறாவை மும்பை கால்நடை மருத்துவமனையில் உள்ள கூண்டில் சிறை வைத்தனர். 

இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், பிடிப்பட்ட புறா தைவானில் திறந்தவெளி நீர் போட்டியில் பங்கேற்கும் புறா என்பது கண்டறியப்பட்டது. மேலும், அந்த புறா உளவு பார்ப்பதற்காக வரவில்லை என்றும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பிடிப்பட்ட புறாவை விடுவிப்பதற்கு போலீசாரிடம் கால்நடை மருத்துவமனை அனுமதி கோரியது. மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்றதை அடுத்து, 8 மாதங்களுக்கு பிறகு பிடிப்பட்ட புறா நேற்று முன்தினம் (30-01-24) விடுவிக்கப்பட்டது.