திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தீவுத்திடல் பூங்காவில் உள்ள பெரியார் சிலை மீது காலணிகளை வைத்து அவமரியாதை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட கட்சியினர் பெரியார் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.