periyar

சிதம்பரத்தில் திராவிடர் கழகம் சார்பில் அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சித்தார்த்தன், சிபிஎம் பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரமேஷ் பாபு, சிதம்பரம் நகர செயலாளர் ராஜா. சிபிஐ மாநில குழு உறுப்பினர் மணிவாசகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி வன்னியரசு, மாவட்ட செய்தி தொடர்பாளர் திருவரசு உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டு பெரியார் சிலை உடைப்பை கண்டித்து கோஷங்களை எழுப்பி கண்டனம் தெரிவித்து பேசினார்கள்.

Advertisment