Advertisment

தஞ்சை அருகே பெரியார் சிலை அவமதிப்பு: திருச்சியில் பெரியார் சிலை சேதம்

Periyar statue

தஞ்சாவூர் அருகே ஒரத்தநாட்டில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. கவராப்பட்டுவில் உள்ள பெரியார் சிலைக்கு காலணி மாலை போடப்பட்டிருந்தது. இதனை கண்டன திராவிடர் கழகத்தினர் அதனை அகற்றிவிட்டு, போலீசாருக்கு தகவல் அளித்தனர். சிலையை அவமதித்தது யார் என்று ஒரத்தநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

திருச்சி சோமரசம்பேட்டையில் உள்ள பெயரில் சிலை சேதமாக்கப்பட்டுள்ளது. பெரியார் சிலையில் இருந்த கைத்தடி உடைக்கப்பட்டுள்ளது. திராவிடர் கழகத்தினர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார், சிலையை சேதப்படுத்தியது யார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

periyar statue
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe