திராவிடர் கழக முன்னாள் தலைவர் தந்தை பெரியாரின் 48வது நினைவு தினம் இன்று (24ஆம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. அதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில், அண்ணா சாலை, சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கி.வீரமணி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் மாலை அணிவித்தும், அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisment