Perarivalan released from puzhal Jail

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீன் கிடைத்ததையடுத்து, பேரறிவாளன் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

Advertisment

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், இன்று அவர் சிறையில் இருந்து வெளியேவந்தார்.

Advertisment

அவரை அழைத்துச் செல்வதற்காக புழல் சிறைக்கு வருகை தந்திருந்த அற்புதம்மாள் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர், அனைத்து அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதேபோல, பேரறிவாளனும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.