இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக விடுதலை செய்தது. அதனைத் தொடர்ந்து அவர், தனது விடுதலைக்காக குரல் கொடுத்தவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துவருகிறார். அந்த வகையில் இன்று பேரறிவாளன் மற்றும் அவரது தாய் அற்புதம்மாள் ஆகிய இருவரும் சசிகலாவை அவரது தி.நகர் இல்லத்தில் சந்தித்தனர்.