தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் அண்ணாவின் திருவுருவப் படத்திற்கு தேமுதிகவின் கழகப் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.