Skip to main content

குழப்பமே உன் பெயர் பெரம்பலூர் எம்.பி.தொகுதியா;ஒர் மீள் பார்வை !

Published on 21/03/2019 | Edited on 21/03/2019

பெரம்பலூர் எம்.பி.தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் குளித்தலை,இலால்குடி , மண்ணச்சநல்லூர் , முசிறி , துறையூர் (SC) , பெரம்பலூர் (SC) பெரம்பலூர் எம்.பி.தொகுதி தொகுதி சீரமைப்புக்கு முன்பு பெரம்பலூர் (தனி), உப்பிலியாபுரம் (தனி), வரகூர்(தனி), அரியலூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தது.

 

பெரம்பலூர் தொகுதியில் இருந்த ஜெயங்கொண்டம், அரியலூர் ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. கரூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை,பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அதுவும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன .துறையூர்(தனி) தொகுதியும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. 

 

ELE

 

1951 ம் ஆண்டு முதல் 2004 வரை தனித்தொகுதியாக இருந்து மறுசீரமைப்புக்குப் பின் 2009 ஆண்டு பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. இது வரை பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் இதுவரை எம்.பியாக இருந்தவர்கள். 

 

1951 - பூவராகசாமி படையாச்சி - டிஎன்டி

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் தாலுக்காவை சேர்ந்த இவர் தமிழ்நாடு உழைப்பாளார் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

 

1957 - எம். பழனியாண்டி -காங்கிரஸ்.

அவர் இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினராகவும் பின்னர் தமிழ் மாநில காங்கிரசு கட்சியில் உறுப்பினராகவும் இருந்தார். இவா் பத்தாம் வகுப்பு படிப்பை முடித்த பின், அரசியலில் நுழைந்து தொழிற்சங்கத் தலைவரானார். 1952 ஆம் ஆண்டு லால்குடியிலிருந்து சென்னை மாகாண சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1952 ஆம் ஆண்டு மற்றும் 1957 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பெரம்பலூர் எம்.பி.தொகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பழனியாண்டி 1957 முதல் 1962 வரை மக்களவையில் உறுப்பினராக இருந்தார்.1986 முதல் 1992 வரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். 1983 முதல் 1988 வரை இந்திய தேசிய காங்கிரசின் தமிழக குழுவின் தலைவர் ஆவார். 1996 ல் தமிழ் மாநில காங்கிரசில் ஜி.கே.மூப்பனாருடன் இணைந்தார். இவருடைய மனைவி எம்.புனிதவள்ளி திருச்சி மாநகராட்சியின் முதல் மேயர். 

 

1962 - இரா. செழியன் - திமுக

பெரம்பலூர் எம்.பி, எழுத்தாளர் எனப் பல தகுதிகளைக் கொண்டவர். பிறந்த ஊர் தஞ்சாவூர் மாவட்டம் திருக்கண்ணபுரம். சனநாயக உரிமைகளைப் பேணிக் காப்பதிலும் ஊழலுக்கு எதிரான முயற்சிகளிலும் ஈடுபட்டவர். மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனின் தம்பி ஆவார். சிறுகதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். 4முறை மேலவை உறுப்பினராக இருந்தார். என்பது குறிப்பிடதக்கது. 

 

1967 - அ. துரைராசு - திமுக 1971 - அ. துரைராசு - திமுக

இவர் தி.மு.க. சார்பில் பெரம்பலூர் பகுதியிலிருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றார். இவர் போட்டியிடும் போது பொதுத்தொகுதியிலிருந்து தனித்தொகுதியாக மாற்றப்பட்டது. 

 

1977 - அ. அசோக்ராஜ் - அதிமுக, 1989 - அ. அசோக்ராஜ் - அதிமுக, 

1991 - அ. அசோக்ராஜ் - அதிமுக

ஆகிய மூன்று முறை பெரம்பலூர் தொகுதியிலிருந்து எம்.பி. ஆனார்கள். 

 

1980 - கே. பி. எஸ். மணி - காங்.

கதிர்வேல் பால சுப்பிரமணி என்பவர் மேனாள் ராணுவ வீரர், சமூக சீர்திருத்தவாதியும் இவர் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

 

1984 - எஸ். தங்கராசு - அதிமுக

இவர். அதிமுக சார்பில் வெற்றிபெற்றார். 

 

BB

 

1996 - ஆ. ராசா- திமுக, 1999 - ஆ. ராசா - திமுக, 2004 - ஆ. ராசா - திமுக

பெரம்பலூர் மாவட்டம், வேலூர் கிராமத்தில் பிறந்தவர், 3 முறை பெரம்பலூர் தொகுதியிலிருந்தும் 1 முறை நீலகிரி தொகுதியிலிருந்தும் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

 

1998 - கபி. ராஜரத்தினம் - அதிமுக

தொடர்ச்சியாக 2 முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதால், அதற்கு ராஜாரத்தினத்தை அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 

 

BB

 

2009 - நெப்போலியன் - திமுக

தென்னிந்தியத் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியுமான இவர் கே.என்.நேரு, மற்றும் அவருடைய சகோதரர் ராமஜெயம் ஆகியோர் உதவியுடன். இவர் 2009 ஆம் ஆண்டு 15 வது மக்களவைத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய சமூகநீதி இணையமைச்சராகப் பொறுப்பு வகித்தார். தற்போது பிஜேபி கட்சியில் இருக்கிறார். 

 

2014 - ஆர்._பி._மருதராஜா - அதிமுக

இவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள, ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் இவர் அதிமுக சார்பில் வெற்றிபெற்றார். 

 

பெரம்பலூர் எம்.பி. தொகுதியில் 1951முதல் 2009 வரை நடந்த எம்.பி. தேர்தல்களில் தி.மு.க., 1962, 1967, 1971, 1996, 1999, 2004, 2009 ஆகிய எம்.பி. தேர்தலிலும், அ.தி.மு.க., 1977,1984, 1989, 1991, 1998 ஆகிய எம்.பி. தேர்தலிலும், காங்கிரஸ் கட்சி 1957, 1980 ஆகிய லோக்சபா தேர்தலிலும் வெற்றி பெற்றது.

 

இந்த தொகுதியில் 7 முறை தி.முக. வெற்றிபெற்றுள்ளது. 

 

15வது எம்.பி. தேர்தல் முடிவுகள்

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் டி. நெப்போலியன் அதிமுக சார்பில் கே. கே. பாலசுப்பரமணியனை 77,604 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.

 

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்

டி. நெப்போலியன் திமுக 398,742

கே. கே. பாலசுப்பரமணியன் அதிமுக 321,138

துரை காமராஜ் தேமுதிக 74,317

ஜி. செல்வராஜ் பகுஜன் சமாஜ் கட்சி 5,014

 

16வது எம்.பி. தேர்தலில் 

வேட்பாளர்    கட்சி    பெற்ற வாக்குகள்

ஆர்._பி._மருதராஜா    அ.தி.மு.க    4,62,693

சீமானூர் பிரபு    தி.மு.க.,    2,49,645

பாரிவேந்தர்    ஐ.ஜே.கே    2,38,887

ராஜசேகரன்    காங்    31,998

 

2019 எம்.பி. தேர்தலுக்கான கள நிலவரம் ! 

 

பெரம்பலூர் எம்.பி.தொகுதியில் தற்போது துறையூர், குளித்தலை, லால்குடி, சட்டசபை தொகுதிகள் தி.மு.க., வசமும் உள்ளது. பெரம்பலூர், மண்ணச்சநல்லூர், முசிறி, இந்த மூன்று தொகுதியும் அ.தி.மு.க. வசம் உள்ளது. 

 

EE

 

இரண்டு தனித்தொகுதிகளை கொண்ட இந்த தொகுதியில் முத்திரையர், தலித் என இரண்டு சமூகத்தினர் சம அளவில் உள்ளனர். இதற்கு அடுத்தப்படியாக ரெட்டியார், உடையார் என அடுத்தடுத்த வகையில் பிரிந்து இருக்கிறார்கள். 

 

கடந்த முறை அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற மருதைராஜீ்க்கு இந்த முறை வாய்ப்பு கொடுக்காமல், முன்னாள் அமைச்சரும் முதல்வர் இ.பி.எஸ்.க்கு மிகவும் நெருக்கமா மாப்பிள்ளை, மாமா என்று உறவுமுறை சொல்லி அழைத்துக்கொள்ளும் சிவபதிக்கு சீட்டு கிடைத்துள்ளது. கடந்த முறை பிஜேபி சார்பில் போட்டியிட்ட தோற்றுபோன பாரிவேந்தர் இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் நிற்பதால் கூடுதல் பலத்தோடு நிற்கினார். அமுமுக சார்பில் தொட்டியம் ராஜசேகரன் நிற்கிறார். 

 

BB

 

இவர் காங்கிரஸ் கட்சி, தமிழ்மாநிலகாங்கிரஸ், பிறகு அதிமுக தற்போது அமுமுக கட்சியில் நிற்கிறார். இவரும் முத்திரையர் சமூகம் என்பதால் சிவபதியும், இவரும் சரிசமாக ஓட்டுக்களை பிரிப்பதற்காக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். 

 

BB


 

ஆரம்பத்தில் பொது தொகுதியாகவும், பிறகு தனித்தொகுதியாகவும் பிறகு பொதுத்தொகுதியாகவும் மாறி மாறி தன்னை மாற்றிக்கொண்ட பெரம்பலூர் எம்.பி. தற்போது, பெரம்பலூர், திருச்சி, கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை இணைத்து பெரம்பலூர் எம்.பி. தொகுதியாக மாறி இருப்பதால் தற்போது பெரம்பலூர் தொகுதி குழப்பமான சூழ்நிலையிலே இருக்கிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சியளிக்கிறது” - திருமாவளவன்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Thirumavalavan said that the Election Commission itself is acting like a one-sided party

மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பாகத் தமிழ்நாட்டில் திமுக தலைமையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகின்றது. சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அரியலூரில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக அரியலூர் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா, பெரியார்,  அம்பேத்கர், காமராஜர் ஆகியோர் சிலைகளுக்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலரை சந்தித்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தொல். திருமாவளவன், “திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக,  கூட்டணியின் வேட்பாளராக சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். 30 ஆம் தேதி சின்னம் கொடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்குவதாக தெரியவில்லை. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு உடனுக்குடன் சின்னங்களை ஒதுக்கி உள்ளது.

எதிரணியில் இருப்பவர்களுக்கு இதுவரையில் சின்னத்தை ஒதுக்காமல், நிராகரித்து தேர்தல் ஆணையமே ஒருதலைபட்சமாக செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. நேர்மையோடு இந்த தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் ஜனநாயகம் காப்பாற்றப்படும். ஆகவே தேர்தல் ஆணையம் ஒரு சார்பு இல்லாமல் தேசிய அளவில் நேர்மையோடு  தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சி பூஜ்யம் என்று எங்கள் கூட்டணியின் தலைவர் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார் ஆகவே தமிழ்நாட்டில் அவர்கள் என்ன சொன்னாலும் எடுபடாது. அவர்களின் முயற்சி வெற்றி பெறாது. தென்னிந்திய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்பட்டு தோல்வியை சந்திக்கும்

நான் எப்போதும் மக்கள் பணி தான் செய்து கொண்டிருக்கிறேன். உறங்கும் நேரத்தை தவிர 20 மணி நேரமும் மக்களோடு மக்கள் பணியில் தான் உள்ளேன். தொகுதி மக்கள் அதனை நன்கு அறிவார்கள் மீண்டும் எனக்கு வாய்ப்பு அளிப்பார்கள். சொந்த தொகுதியின் வேட்பாளராகத்தான் மீண்டும் இந்த களத்தில் நிற்கிறேன். அனைத்து தரப்பு மக்களின் ஆதரவோடு மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அதில் சிதம்பரமும் ஒன்று” என்றார்.

Next Story

வேட்புமனு தாக்கல் செய்த தயாநிதி மாறன் (படங்கள்)

Published on 27/03/2024 | Edited on 27/03/2024

 

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. இன்று கடைசி நாள் என்பதால் ஸ்டார் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தயாநிதி மாறன் இன்று மனுத்தாக்கல் செய்தார். செனாய் நகரில் உள்ள மண்டல அலுவலகம் 8ல் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சிற்றரசு வெற்றியழகன், அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.