Skip to main content

வீட்டிலேயே பிரசவம் பார்த்த தம்பதிகள் மாயம்!!!

Published on 26/05/2020 | Edited on 26/05/2020
perambalur



பெரம்பலூர் துறைமங்கலம் நியூ காலனி இரண்டாவது தெருவை சேர்ந்தவர் 38 வயது சரீஷ்குமார். இவர் மரசெக்கு மூலம் எண்ணெய் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். இவரது மனைவி 35 வயது பேபி. நிறைமாத கர்ப்பிணியான பேபிக்கு கடந்த 17ஆம் தேதி அவரின் வீட்டிலேயே சுகபிரசவம் நடந்துள்ளது. அதில் பேபிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 


இந்த தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று விசாரித்துள்ளனர். அதோடு பேபியையும் அவரது குழந்தையையும் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெறுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். 

இதுதொடர்பாக சுகாதார துறையினருக்கும், குழந்தையின் பெற்றோர்களுக்கும் நீண்ட விவாதம் நடந்துள்ளது. ஆனாலும் மருத்துவமனைக்கு வர முடியாது என குழந்தை பெற்ற பேபி பிடிவாதமாக கூறியுள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் தம்பதிகள் இருவரும் பிறந்த குழந்தையுடன் குடியிருந்த வாடகை வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர்.

 

 


இந்த நிலையில் அவர்கள் ஒரு வீடியோ ஒன்று பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அதில் நானும் எனது குழந்தையும் நலமாக இருக்கிறோம். அப்படியிருந்தும் சுகாதாரத்துறையினர் போலீசாரை வைத்து எந்த அடிப்படையில் என்னையும், என் குழந்தையையும் கைது செய்வார்கள். மருத்துவமனையில் சேர்ந்தே ஆகவேண்டும் என பிடிவாதம் பிடிப்பது ஏன்? ஜனநாயக நாட்டில் இயற்கையாக வீட்டில் குழந்தை பெற்றது குற்றமா? எனது உடல்நிலை நன்றாக உள்ளது, ஆனால் அரசு மருத்துவமனையில் ஏற்கனவே எனது உடல்நிலையை மோசம் ஆக்கிவிட்டனர் என்று கணவன், மனைவி இருவரும் வீடியோ காட்சியில் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தம்பதியினர் மீது உரிய விசாரணை நடத்தக்கோரி சுகாதாரத்துறை இயக்குனர் மாவட்ட காவல்துறை அதிகாரி நிஷா பார்த்திபனிடம் புகார் அளித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.