Skip to main content

பெரம்பலூர் சர்க்கரை ஆலை: அனைத்து தரப்பு ஆலோசனை கூட்டம்!

Published on 08/12/2021 | Edited on 08/12/2021

 

Perambalur Sugar Mill: All-Party Consultative Meeting

 

பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள், டிராக்டர் உரிமையாளர்கள் மற்றும் ஆலை அதிகாரிகள் கூட்டம் ஆலைக் கூட்ட அரங்கில் நேற்று (7-12-2021) மாலை 3 மணிக்கு தலைமை நிர்வாகி & மாவட்ட வருவாய் அலுவலர் கே. சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. அதிகாரிகள் தரப்பில் தலைமைக் கரும்பு அலுவலர் ரவிச்சந்திரன், துணைத்தலைமை ரசாயினர் பெரியசாமி, துணைத்தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) நாராயணன், கணக்கு அலுவலர் ஜான்பிரிட்டோ, தொழிலாளர் நல அலுவலர் ராஜாமணி, மற்றும் பொறியியல், ரசாயணப்பிரிவு, கரும்பு அபிவிருத்தி அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

கரும்பு விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மு. ஞானமூர்த்தி, ஏ.கே. ராசேந்திரன், சீனிவாசன், பெருமாள், ராமலிங்கம், சக்திவேல், பச்சமுத்து, வரதராஜன், பாலகிருஷ்ணன் டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தேவேந்திரன், நடராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில், வரும் 10.12.2021இல் துவங்குவதாக இருந்த 2021 - 2022 ஆண்டுக்கான கரும்பு அரவையைப் பருவமழை காரணமாக இந்த மாத இறுதியில் துவங்கலாம் என ஆலோசிக்கப்பட்டது. பங்குதாரர்கள் பேரவைக் கூட்டம் வரும் 23.12.2021 அன்று நடக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் சுமார் 3 லட்சம் டன் அரைப்பது என திட்டமிடப்பட்டுள்ளது. அரவை நாள் 107 நாள் எனவும், ஒருநாளைக்கு 2,542 டன் அரைப்பது எனவும்,  இந்த ஆண்டில் 2,20,000 குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சர்க்கரை கட்டுமானம் 9.5% கொண்டுவருவது என கூறினார்கள். 

 

Perambalur Sugar Mill: All-Party Consultative Meeting

 

இணைமின் திட்டத்திற்கு சுமார் ரூ. 10 கோடி பங்கு தொகை கொடுத்த விவசாயிகளுக்குப் பங்கப்பத்திரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. சேலம் மோகனூர் சர்க்கரை ஆலைக்கு வழங்கிய பக்காசுக்கு ரூ. 7 கோடி பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்குக் கொடுக்க வேண்டிய பாக்கி தொகையைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 2020 - 2021ஆம் ஆண்டுக்கு அரசு அறிவித்த கூடுதல் தொகை டன்னுக்கு ரூ. 42.50ம் தற்போது தமிழ்நாடு அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகை ரூ. 150ம் சேர்த்து ரூ. 192.50ஐ வரும் பொங்கலுக்குள் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இணைமின் திட்ட உற்பத்தியின் திட்ட இலக்கான 18 மெகாவாட் மின்சாரத்தை நடப்பு கரும்பு அரவைப் பருவத்தில் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

 

உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்கும்போது அதில் பாதி லாபத்தை ஆலை நிர்வாகத்திற்கு வழங்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பங்குதாரர்கள் பேரவைக் கூட்டத்தில் வழங்கப்படும் சர்க்கரையை 5 கிலோவாக கூட்டி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த கரும்பு டன்னுக்கு ரூ. 4000 வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆலை அரவை துவக்க விழாவிற்குப் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்களையும், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் அழைப்பது என முடிவெடுக்கப்பட்டது. பருவமழையால் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

 

Perambalur Sugar Mill: All-Party Consultative Meeting

 

கரும்பு எடுத்துவரும்போது மின் விபத்து ஏற்படாமல் இருக்க தாழ்வான மின் கம்பிகளை உயர்த்திக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கரும்பு நடவுக்கு தகுந்தார்ப்போல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டி கரும்புக்கான விலையை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளாளர் முன்னேற்ற சங்க உயர்மட்ட நிர்வாகிகள் கூட்டம்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Vellalar Munnetra Sangha High Level Executive Meeting

தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கழகத்தின் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து உயர்மட்ட நிர்வாகிகள் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் ஆர்.வி. ஹரிஹரூன் தலைமையில் இன்று (12-03-24) நடைபெற்றது. இதில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்கள் சார்பில் பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்த கருத்துகளை உயர்மட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள். மேலும், இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சோழிய வேளாளர் நலச் சங்கம் சார்பாக முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள். இதில் தேர்தல் கூட்டணி, ஆதரவு நிலைப்பாடுகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆலோசனைகள் மேற்கொண்டு இறுதி முடிவை வெள்ளாளர் முன்னேற்ற சங்கம் & கழகத்தின் உயர் மட்ட கமிட்டி விரைவில் அறிவிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது .

Next Story

‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம் - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
We will make the India coalition win to protect India CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் காணொளி வாயிலாக இன்று (23.02.2024) நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதிப் பொறுப்பாளர்கள் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டிய அவசர அவசியம் காரணமாகத்தான் நேற்று சட்டமன்றம் முடிந்தவுடன் இன்று காணொலி வாயிலாக நடத்துகிறோம். நேற்று நான் சட்டமன்றத்தில் ஒரு அழைப்பு விடுத்தேன்.  கலைஞரின் நினைவிடமும், பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடமும் வருகிற 26 ஆம் தேதி, மாலை 7 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் திறக்கப்படுகிறது.

தாய் தமிழ்நாட்டையும் திமுகவையும் காத்த தலைவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக மிகப் பிரமாண்டமாக இந்த நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. விழாவாக இல்லாமல் நிகழ்ச்சியாக நாம் நடத்துவதால் அந்நிகழ்வில் நீங்கள் அனைவரும் தவறாது வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அடுத்து, உங்கள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நடைபெற்ற கூட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியடைந்துள்ளன. மிகப் பிரமாண்டமாக நடத்திக் காட்டிவிட்டீர்கள். பெரும்பாலான கூட்டங்களை டிவியில் பார்த்து பிரமித்தேன்.

அனைத்துத் தொகுதிகளிலும் ஒரே மாதிரியாக மேடை அமைக்கப்பட்டு, எல்.ஈ.டி திரைகளுடன் பிரம்மாண்ட கூட்டங்களாக இருந்தன. மக்கள் நிறைந்து காணப்பட்டார்கள், டாப் ஆங்கிளில் எடுக்கப்பட்ட கூட்ட புகைப்படங்களும் மலைப்பை ஏற்படுத்தியது. இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கூட்டங்கள் பரவலாக மாநிலம் முழுவதும் கழகத்தினரை உற்சாகப்படுத்தியிருக்கின்றன. தேர்தல் பணிகளைப் பொறுத்தவரை, நாம் மிக வேகமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

We will make the India coalition win to protect India CM MK Stalin

புதுவை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 40 தொகுதியிலும் நாம் தான் முழுமையான வெற்றி பெறுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. அந்த வெற்றி மகத்தானதாக இருக்க வேண்டும். நாம் பெறும் வாக்குகள் அபரிமிதமாக இருக்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு திட்டம் பற்றியும் படித்துவிட்டு, எளிமையாகப் பரப்புரைச் செய்ய வேண்டும். ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரையும் காப்பாற்றும் அரசு, நமது அரசு என எளிமையாகப் புரியும் வகையில் பரப்புரை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் எனத் தொடங்கிய தேர்தல் பரப்புரை, நமது சாதனைகள், நிதிநிலை அறிவிப்புகள், மத்திய பா.ஜ.க. அரசின் அநீதிகள் ஆகியவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்லும். இந்தியாவைக் காக்க‘இந்தியா’வை வெற்றி பெறச் செய்வோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.