Skip to main content

திருமணத்தை மீறிய உறவு; வெளியில் சொன்ன இளைஞர் சுட்டுக் கொலை

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

perambalur mangalamedu two youngsrer incident

 

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மங்கலமேடு பகுதியில் உள்ள நரி ஓடை பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 43). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் வசித்து வருபவர் அஜித் (வயது 26). இவருக்கு மனைவி மற்றும் ஒரு குழந்தை என குடும்பம் உள்ளது.

 

இந்நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் ரஜினிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த அந்தப் பெண்ணின் கணவர், தனது மனைவி மற்றும் ரஜினி ஆகிய இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், அப்பெண் அதையும் மீறி கணவர் வெளியில் செல்லும் நேரங்களில் ரஜினியை தன் வீட்டிற்கு வரவழைத்து அவ்வப்போது தனிமையில் இருந்து வந்துள்ளார். இவர்களின் இந்த திருமணத்தை மீறிய உறவு ரஜினியின் குடும்பத்தினர் உட்பட மற்ற உறவினர்களுக்கும் தெரியவந்ததற்கு காரணம் அஜித் தான் என்று ரஜினி கருதினார். இதனால் அஜித் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார் ரஜினி.

 

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியூர் சென்று வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு வீட்டுக்கு திரும்பிய ரஜினி அதிக அளவு மது அருந்திவிட்டு, அந்த போதையில் அஜித் வீட்டிற்கு சென்று அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த ரஜினி தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் அஜித்தை சுட்டார். இதில் அவரது தோள் மற்றும் கையில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. துப்பாக்கியால் சுடப்பட்டதால் ரத்த வெள்ளத்தில் அஜித் சரிந்துள்ளார்.

 

இதனைக்  கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அஜித்தை மீட்டு பெரம்பலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அஜித் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அஜித்தை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ரஜினி அந்த துப்பாக்கியுடன் பெரம்பலூர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து போலீசார் ரஜினி மீது கொலைவழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். திருமணத்தை மீறிய உறவு விவகாரத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.