Skip to main content

முறையற்ற தொடர்பு... தற்கொலையில் முடிந்த சோகம்!

Published on 20/01/2021 | Edited on 21/01/2021

 

PERAMBALUR INCIDENT LODGE

 

பெரம்பலூர் நகரில் உள்ளது வெங்கடேசபுரம் நகர். அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த முறையற்ற தொடர்பில் இருந்த இருவர் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காலை நீண்ட நேரம் வரை கதவை திறக்கவில்லை அதையடுத்து அந்த லாட்ஜ் ஊழியர்கள் பலமாக கதவைத்தட்டி திறக்குமாறு அழைத்துள்ளனர். நீண்டநேரம் இருவரும் கதவு திறக்காததால் பெரம்பலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்று காவல்துறையினர் உதவியுடன் அந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது. உள்ளே ஒரு ஆண் ஒரு பெண் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அந்தப் பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

 

இதையடுத்து உயிருடன் உள்ள ஆணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் யார் பெரம்பலூரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இதற்கு காரணம் என்ன இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்தனர். அவர்களின் விசாரணையில், அந்த ஆண் சென்னை கே.கே நகர் பகுதியை சேர்ந்த 45 வயது மகேந்திரன் என்பதும், இறந்துபோன பெண்  துறையூர் அருகே உள்ள எரக்குடி என்ற ஊரைச் சேர்ந்த பூங்கொடி என்பதும், இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தற்போது சென்னை கே.கே நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்  என்பதும்  தெரிந்தது. அந்த ஓட்டலுக்கு அடிக்கடி சாப்பிட செல்லும் மகேந்திரன் பூங்கொடியுடன் அறிமுகமாகி  இருவரும் முறையற்ற தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

 

பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் பூங்கொடி. சில நாட்கள் கூட பிரிந்திருக்க முடியாத மகேந்திரன் அவரை பின்தொடர்ந்து வந்தவர், பூங்கொடியை அவரது ஊரில் இருந்து பெரம்பலூருக்கு வரவழைத்து கடந்த 17-ஆம் தேதி அந்த தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.

 

அங்கிருந்தபடியே திருச்சி, சமயபுரம், கல்லணை, முக்கொம்பு ஆகிய பகுதிகளுக்கு ஜாலியாக சென்று சுற்றிப்பார்த்து விட்டு இரவு நேரத்தில் பெரம்பலூர் விடுதிக்குவந்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த தகவல் அவரவர்கள் வீடுகளுக்கும் தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இரு குடும்பத்தினரின் நெருக்கடி காரணமாக இருவரும் விஷம் அருந்தி இறப்பது என்று முடிவு செய்து அதன்படி நேற்று இரவு விடுதி அறையில் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளனர். இதில் பூங்கொடி இறந்து போனார். மகேந்திரன் தீவிர சிகிச்சையில் உள்ளார். மகேந்திரனுக்கு மனைவி பிள்ளைகள்  என  குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் மகேந்திரன் திசைமாறி சென்றதன் விளைவு இப்போது இருகுடும்பத்தினரையும் அவமானத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.