Skip to main content

முறையற்ற தொடர்பு... தற்கொலையில் முடிந்த சோகம்!

Published on 20/01/2021 | Edited on 21/01/2021

 

PERAMBALUR INCIDENT LODGE

 

பெரம்பலூர் நகரில் உள்ளது வெங்கடேசபுரம் நகர். அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்த முறையற்ற தொடர்பில் இருந்த இருவர் இன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காலை நீண்ட நேரம் வரை கதவை திறக்கவில்லை அதையடுத்து அந்த லாட்ஜ் ஊழியர்கள் பலமாக கதவைத்தட்டி திறக்குமாறு அழைத்துள்ளனர். நீண்டநேரம் இருவரும் கதவு திறக்காததால் பெரம்பலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்று காவல்துறையினர் உதவியுடன் அந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது. உள்ளே ஒரு ஆண் ஒரு பெண் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அந்தப் பெண் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

 

இதையடுத்து உயிருடன் உள்ள ஆணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் யார் பெரம்பலூரில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கிய இதற்கு காரணம் என்ன இப்படி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்தனர். அவர்களின் விசாரணையில், அந்த ஆண் சென்னை கே.கே நகர் பகுதியை சேர்ந்த 45 வயது மகேந்திரன் என்பதும், இறந்துபோன பெண்  துறையூர் அருகே உள்ள எரக்குடி என்ற ஊரைச் சேர்ந்த பூங்கொடி என்பதும், இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தற்போது சென்னை கே.கே நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்  என்பதும்  தெரிந்தது. அந்த ஓட்டலுக்கு அடிக்கடி சாப்பிட செல்லும் மகேந்திரன் பூங்கொடியுடன் அறிமுகமாகி  இருவரும் முறையற்ற தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.

 

பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார் பூங்கொடி. சில நாட்கள் கூட பிரிந்திருக்க முடியாத மகேந்திரன் அவரை பின்தொடர்ந்து வந்தவர், பூங்கொடியை அவரது ஊரில் இருந்து பெரம்பலூருக்கு வரவழைத்து கடந்த 17-ஆம் தேதி அந்த தனியார் விடுதியில் அறை எடுத்து இருவரும் தங்கியுள்ளனர்.

 

அங்கிருந்தபடியே திருச்சி, சமயபுரம், கல்லணை, முக்கொம்பு ஆகிய பகுதிகளுக்கு ஜாலியாக சென்று சுற்றிப்பார்த்து விட்டு இரவு நேரத்தில் பெரம்பலூர் விடுதிக்குவந்து தங்கி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த தகவல் அவரவர்கள் வீடுகளுக்கும் தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இரு குடும்பத்தினரின் நெருக்கடி காரணமாக இருவரும் விஷம் அருந்தி இறப்பது என்று முடிவு செய்து அதன்படி நேற்று இரவு விடுதி அறையில் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளனர். இதில் பூங்கொடி இறந்து போனார். மகேந்திரன் தீவிர சிகிச்சையில் உள்ளார். மகேந்திரனுக்கு மனைவி பிள்ளைகள்  என  குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில் மகேந்திரன் திசைமாறி சென்றதன் விளைவு இப்போது இருகுடும்பத்தினரையும் அவமானத்திலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

சரமாரியாகத் தாக்கிய மகன்; கடைசி வரைக்கும் காட்டிக்கொடுக்காத தந்தை - அதிரவைக்கும் சம்பவம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
The son beaten his father in a property dispute

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதியில் உள்ள, தலைவாசல் வடகுமரை கிராமத்தில் செயல்பட்டு வருகிறது அமிர்தா சேகோ எனும் தொழிற்சாலை. இதன் உரிமையாளர் குழந்தைவேலு. இவரின் மனைவி ஹேமா. இந்தத் தம்பதிக்கு சக்திவேல் என்ற மகனும், மகளும் இருக்கின்றனர். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. இருவரும் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குழந்தை வேலுவின் மகன் சக்திவேல் பி.டெக், எம்.பி.ஏ படித்துவிட்டு, தந்தையின் தொழிற்சாலைகளைக் கவனித்து வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடமாக சக்திவேல் அமிர்தா சேகோ தொழிற்சாலையை நிர்வகித்து வந்துள்ளார். இந்தநிலையில், சக்திவேல் தொழிலில் கடந்த சில மாதங்களாக பெரும் பின்னடவை சந்தித்துள்ளார். இதனால் வெளியே கடன் வாங்கி தொழிலை நடத்தியுள்ளார். இதனால் அதிக கடனுக்கு ஆளாகியுள்ளார். ஒருகட்டத்தில், மகன் கடன்வாங்கி தொழில் நட்த்திவருவது, தந்தை குழந்தைவேலுக்கு தெரியவரவே இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஏகப்பட்ட கடனில் சிக்கியதற்கு மகனின் பொறுப்பற்ற நிர்வாகத் திறனே காரணம் என முடிவுக்கு வந்த தந்தை, அவரது நிர்வாகத்தில் எவ்வித தலையீடும் செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனால், தொழிற்சாலை ஊழியர்களுக்கு சம்பளம் போடுவதில்கூட சிரமத்தைச் சந்தித்துள்ளார் மகன் சக்திவேல். இதனால் தந்தைக்கு பெரம்பலூரில் உள்ள ரைஸ் மில்லின் பணத்தை எடுத்து பயன்படுத்த விரும்பியுள்ளார். ஆனால், பெரம்பலூர் தொழிற்சாலையில் குழந்தைவேலுவுக்கு 50 சதவிகித பங்கும், குழந்தை வேலுவின் மாமனார் குடும்பத்திற்கு கணிசமான பங்கும் இருந்துள்ளது. குழந்தைவேலுதான் முழுமையாக அதனைப் பார்த்து வந்துள்ளார். பணம் இருந்தும் தந்தை, தனது கடன் பிரச்சனைக்கு உதவவில்லை எனக் குழந்தைவேலு மீது மகன் சக்திவேல் ஆத்திரத்தில் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள தனது வீட்டில் உள்ள திண்ணையில் குழந்தைவேலு உட்கார்ந்திருந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சக்திவேல் அவரிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். பின்னர், குழந்தைவேலுவைத் தனது இரண்டு கைகளால் மாறி மாறி சக்திவேல் தாக்கி உள்ளார். இதைக்கண்ட குழந்தைவேலுவின் மனைவி ஹேமா மற்றும் வேலையாட்கள் சக்திவேலினை வந்து பிடித்து தடுத்து நிறுத்தி உள்ளனர். ஆனாலும் ஆத்திரம் அடங்காத சக்திவேல், தனது தந்தையை முகத்தில் தாக்கி உள்ளார். இதில் நிலைகுலைந்துபோன குழந்தைவேலு உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடலில் காயங்கள் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் இருந்து கைகளத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் எஸ்.ஐ பழனிசாமி விசாரணை நடத்தியுள்ளார். மறுபுறம், சிகிச்சை முடிந்து வெளியேவந்த குழந்தைவேலு தனக்கும், தன் மகனுக்கும் உள்ள பிரச்னையைத் தாங்களே பேசி முடித்துக் கொள்வதாக எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய இரண்டு நாட்களில் குழந்தைவேலு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் குழந்தைவேலுவை பிப்ரவரி 16 அன்று சக்திவேல் தாக்கியது, அவர்களது வீட்டில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதன் மூலம் கைகளத்தூர் போலீஸார் சக்திவேலினை கைதுசெய்து மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடைசிவரை மகனைக் காட்டிக் கொடுக்காமல் இருந்த தந்தை அவமானம் தாங்காமல் மருந்து குடித்து உயிரை மாய்த்துக்கொன்டாலும், தற்போது இரண்டு மாதங்களுக்கு பிறகு உண்மை வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.