கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவ பணியாளர்கள், தூய்மைபணியாளர்கள், ரேஷன் கடை பணியாளர்கள், மின் வாரியத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு முக கவசம், கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிட வலியுறுத்தியும், போராடி பெற்ற சட்டங்களை, சலுகைகளை பறிக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் சிஐடியு சார்பில் பெரம்பலூரில் புதிய பேருந்துநிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றபொழுது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.