Skip to main content

பெரம்பலூர் அரசு கல்லூரி மாணவ மாணவிகள் மறியல் போராட்டம்!!

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

பெரம்பலூரில் 2006ல் பாரதிதாசன் பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரியாக துவக்கப்பட்டு செயல்பட்டது. ஆண், பெண் என இருபாலரும் படிக்கும் இந்த கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு 24 பாட திட்டங்கள் கொண்டுவரப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. உறுப்பு கல்லூரியாக இருந்ததை இந்த ஆண்டு அரசு கல்லூரியாக மாற்றி உத்தரவிட்டது. 

 

 Perambalur Government college students protest!!


இரண்டு ஷிப்ட் முறையில் காலை மதியம் என 3000 மாணவர்கள் படிக்கின்றனர். ஆனால் இந்த ஆண்டு 24 பாடத்திட்டத்திலிருந்து பிஎஸ்சி மேக்ஸ், பி.சி.ஏ, பி.ஏ ஹிஸ்ட்ரி, MA தமிழ் - ஆங்கிலம், கணக்கு, MPA, MCA. உட்பட 11 பாட திட்டங்களை நீக்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உயர்கல்வித் துறை. இந்த கல்லூரியில் ஏழை மற்றும் நடுத்தர குடும்ப பிள்ளைகள் தான் படித்து வந்தனர். 

 Perambalur Government college students protest!!


விருப்ப பாடங்களை படிக்ககூடாது என நீக்கியுள்ளது கல்வித்துறை. இதைக்கண்டு கொதித்தெழுந்த மாணவ, மாணவிகள் கல்லூரி அமைந்துள்ள குரும்பலூரில் நேற்று காலை 11 மணியளவில் சாலை மறியல் செய்தனர். இதையடுத்து பெரம்பலூர் போலீஸ் டிஎஸ்பி., ரவீந்திரன் தலைமையில் போலீசார்  மாணவர்களை சமாதானப்படுத்த கல்லூரி வளாகத்தில் கல்லூரி முதல்வர் ஜானகிராமன் முன்னிலையில் மாணவர்கள் தரப்பில் செந்தில், மணிகண்டன் பிரவீன்-பிரிதா ஆகியோருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்.

 

 Perambalur Government college students protest!!


அப்போபோது முதல்வர் ஜானகிராமன் நீக்கப்பட்ட பாட பிரிவுகளை சேர்க்க கோரி உயர் கல்விதுறைக்கு கல்லூரி சார்பாக பரிந்துரை செய்யப்படும். அரசு உத்திரவினை எதிர்பார்க்கிறோம் என்றார். 

பாரதிதாசன் பல்கலைகழக கட்டுப்பாட்டில் உள்ள 11 கல்லூரிகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள அரசுகல்லூரிகளிலும் மேற்படி பாடத்திட்டம் நீக்கப்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. நீக்கப்பட்ட பாடங்களை  கற்றுத்தரும் கெளரவ பேராசியர்கள் (பெரம்பலூரில் மட்டும் 22 பேர்) பணியை இழக்கப் போகிறார்கள். இதேபோல் தமிழகம் முழுவதும் ஆயிரம் கணக்கானவர்களை அரசு வெளியேற்ற உள்ளது. காரணம் அரசின் நிதிச்சுமை - அடுத்து அரசு கல்லூரியில் படிக்க விருப்பமான பாடங்கள் இல்லை என்பதால், மாணவர்களை தனியார் கல்லூரியை நோக்கி மறைமுகமாக துரத்துகிறது. அரசு தனியார் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துவருகிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.