Skip to main content

இரு மகள்களுடன் தாய் தற்கொலை... போலீஸ் விசாரணை...

Published on 25/11/2020 | Edited on 25/11/2020

 

ddd


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ளது வி.களத்தூர். மில்லத் நகரில் வசிப்பவர் சாகுல் அமீது. வயது 40. இவருக்கு ரகமதுன்னிஷா (35) என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். சாகுல் அமீது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அவரது வீட்டில் மேல் மாடியில் ரகமதுன்னிஷா அவரது இரு மகள்களுடன் வசித்து வருகிறார். கீழ் வீட்டில் அவரது மாமனார் சபியுல்லா, மாமியார் முஸ்தூரி பேகம் ஆகிய இருவரும் வசித்து வந்துள்ளனர்.

 

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல், அவர்கள் வீட்டுக்குப் பால் கொடுப்பதற்காக, பால்காரர் சென்றுள்ளார். அப்போது மாடியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து பால்காரர் கீழ் வீட்டில் குடியிருந்த ரகமதுன்னிஷாவின் மாமனார் மாமியாரிடம் துர்நாற்றம் வீசுவது குறித்துக் கூறியுள்ளார்.

 

இதையடுத்து வி.களத்தூர் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்துள்ளனர். அங்கிருந்து விரைந்து வந்த போலீஸார் மாடிக்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. உடனே கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரகமதுன்னிஷா தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளார். கீழே அவரது இரு பெண் குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி இறந்துகிடந்தனர். உடனே மூன்று உடல்களையும் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் இறந்து போன ரகமதுன்னிஷாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவரது கணவர் சாகுல் அமீது வெளிநாட்டிலிருந்து மனைவி மருத்துவச் செலவிற்காக அவ்வப்போது பணம் அனுப்பி வைத்ததாகவும், அந்தப் பணத்தை அவரது உறவினர்கள் சரிவர கொடுக்கவில்லை என்றும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட ரகமதுன்னிஷா தற்கொலை செய்து கொண்டதோடு தனது இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

 

இப்படி குடும்பப் பிரச்சனை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகள்களும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வி.களத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

“ எங்களுக்கு உத்தரவிடுங்கள்...” - அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

தமிழக அரசு மூலம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நலத்திட்ட  நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒன்றிய அரசிடமிருந்து  திட்டங்களைப் பெற்றுநிறைவேற்றிட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, அருன் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.

பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து லால்குடியில் இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணி ரவுண்டானாவில் தொடங்கியது. முன்னதாக மத்திய மாவட்டச் செயலாளர் வைரமணி, லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு பிரச்சாரப் பேரணியைத் தொடங்கி வைத்து பேசுகையில், “லால்குடி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நலத்திட்ட வளர்ச்சி பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நமது பகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நடைபெற்றிருப்பதை நன்கு அறிவீர்கள். மாநில அரசு செயல்படுத்தக்கூடிய திட்டங்களைக் காட்டிலும் ஒன்றிய அரசிடமிருந்து திட்டங்களைப் பெற்று நமது பகுதியில் நிறைவேற்றிட வேண்டும். இது நமது சொந்தத் தொகுதி என்பதால் அதிகமாகத் திட்டங்களைக் கொண்டு வந்து பணிகளைச் செய்திட உங்கள் ஆதரவு கேட்டு வந்துள்ளோம்.

Minister KN Nehru in support of Arun Nehru at perambalur for lok sabha election

எங்களுக்கு உத்தரவிடுங்கள், நாங்கள் பணியாற்றத் தயாராக உள்ளோம். லால்குடி நகராட்சி பகுதியில் புதிய பேருந்து நிலையம், தாலுகா அலுவலகம், அலுவலகத்திற்கு புதிய கட்டிடம், பொதுமக்கள் வசதிக்கேற்ப புதிய மார்க்கெட் அமைக்கப்பட உள்ளது. இந்தப் பணிகள் எல்லாம் அடுத்த மாதம்  தொடங்கப்பட உள்ளது. எனவே இப்படிப்பட்ட எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றிட உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அருண் நேருவை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்றத் தி.மு.க வேட்பாளர் அருண் நேரு வாக்காளரிடம் வாக்கு சேகரித்தார்.