Skip to main content

மக்கள் பணத்தை வீணடிக்கும் விசாரணை ஆணையங்கள்?! நீதிபதிகள் அதிருப்தி

Published on 01/08/2018 | Edited on 01/08/2018

 

highcourt

 

 

 

சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்தாக கடந்த 2011-ஆம் ஆண்டு ஜூன் 22-ம் தேதி நீதிபதி ரகுபதி ஆணையம் அமைக்கப்பட்டது.


இந்நிலையில் இந்த விசாரணை ஆணையம் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி, முன்னாள் துணை முதல்வரான மு.க.ஸ்டாலின், பொதுப் பணித்துறை அமைச்சார் துரைமுருகன் ஆகியோருக்கு 2015ஆம் ஆண்டு சம்மன்  அனுப்பியது.



இந்த ஆணையம் அமைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யவும், தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யவும், ஆணைய நடைமுறைகளை எதிர்த்தும் மூவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கும், விளக்கமளிக்க கோரிய சம்மனுக்கு 2015-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

 

highcourt


 

 


இந்நிலையில் இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ஆணையங்கள் அமைக்கப்படுவது தேவையற்றது என கருத்து தெரிவித்ததுடன், செயல்பாட்டில் உள்ள ஆணையங்கள், அவற்றில் பணியமர்த்தபட்டவர்கள், செலவிடப்பட்ட தொகை போன்ற விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி ஆணையங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தார்.

 



அந்த அறிக்கையில் "5 விசாரணை ஆணையங்கள் செயல்பாட்டில் உள்ளது. 2013ஆம் ஆண்டு தர்மபுரி இளவரசன் மரணம் தொடர்பாக நீதிபதி சிங்காரவேலு, 
2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை தொடர்பாக நீதிபதி  எஸ்.ராஜேஸ்வரன்,
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக  நீதிபதி ஏ.ஆறுமுகசாமி, தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக  நீதிபதி அருணா ஜெகதிசன் ஆணையம் ஆகியவை செயல்பாட்டில் இருக்கிறது.

இதில் இளவரசன் மரணம் தொடர்பான நீதிபதி சிங்காரவேலு ஆணைய விசாரணை மட்டும் இந்த மாத இறுதியில் முடியவுள்ளது. அதன்பின்னர் அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள்.

 



சிங்காரவேலு ஆணையத்துக்கு 2 கோடியே 6 லட்சம்; நீதிபதி ராஜேஸ்வரன் ஆணையத்துக்கு ஒரு கோடியே 47 லட்சம் ரூபாய் ; நீதிபதி ஆறுமுகச்சாமி ஆணையத்துக்கு 32 லட்சம் ரூபாய்
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்துக்கு 27 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

புதிய தலைமை செயலக கட்டிட முறைகேடு தொடர்பான நீதிபதி ரகுபதி ஆணையத்துக்கு இதுவரை 4 கோடியே 11 லட்ச ரூபாய் செலவு செய்யப்பட்டது. மேலும் , ஒவ்வொரு ஆணையத்துக்கும் குறைந்தபட்சம் 5 பேர் என்ற கணக்கில் ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, விசாரணைக்கு தடை விதிக்கப்பட்ட 3 ஆண்டுகளில் மட்டும் 2 கோடியே 25 லட்சத்துக்கு மேல் செலவிடப்பட்டதை சுட்டிக்காட்டியதுடன், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் தொகை செலவிடப்பட்டதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்தார். இது வீண் செலவு இல்லையா எனவும் கேள்வி எழுப்பினார்.

 


ஆணையங்களின் செயல்பாடுகள் மீது அரசு கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதை தான் காட்டுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். இதுபோன்ற தவறுகளையும், மக்கள் பணம் வீணடிக்கப்படுவதையும் நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது என தெரிவித்தார்.

இதன்பின்னர், மனுதாரர்  மு.கருணாநிதி தரப்பு வாதங்களை தொடங்கவும், அதன்பின்னர் அரசு வாதிடவும் அறிவுறுத்தினார். அதற்கு அரசும், ஆணைய தரப்பும் ஒத்துக்கொண்டது. ஆனால், கருணாநிதியிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்றும், அவர் தற்போது உடல் நலம் குன்றியுள்ளதால் வழக்கை ஒத்திவைக்கை வேண்டுமென மூத்த வழக்கறிஞர் ப்பி.வில்சன் கோரிக்கை வைத்தார். நீதிபதி அதை ஏற்க மறுக்கவே  சற்று நேரம் காரசார வாதம் நடைபெற்றது.

 



பிரதான வழக்கை இந்த நீதிபதி விசாரிக்க கூடாது என்றும், இடையிட்டு மனுவை மட்டுமே விசாரிக்க வேண்டுமென திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கருணாநிதி, ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் கருணாநிதி வழக்கு மட்டும் ஏன் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது என கருணாநிதி தரப்பு மூத்த வழக்கறிஞர் வில்சன் கேள்வி எழுப்பினார்.

 



அதன்பின்னர் இரண்டு வார கால அவகாசம் வழங்க மறுத்த நீதிபதி வழக்கை நாளை ஆகஸ்ட் 2ஆம் தேதி ஒத்திவைத்தார். நாளை ஆணையம் மற்றும் அரசு தரப்பும் வாதங்களை முன்வைக்கவும், நாளையோ அல்லது நாளை மறுநாளோ திமுக தலைவர் கருணாநிதி தரப்பு வாதங்களை முன்வைக்க உத்தரவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

'கடைசி நேரத்தில் இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'- நீதிமன்றம் பதில்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
'Can't order transfer at the last moment'- court reply

தமிழக கூடுதல் டிஜிபி அருண் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் எனவே அவரை  இடமாற்றம் செய்ய வேண்டும் எனக்கோரி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஐபிஎஸ் அதிகாரி அருணை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது. அதிகாரிகள் நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் கண்காணித்து தவறு செய்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.  

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் எஸ்.கே.சாமி என்பவர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். தேர்தல் ஆணையம் சார்பில் காவல்துறை கூடுதல் டிஜிபி ஆக இருக்கக்கூடிய காவல்துறை அதிகாரி அருண் ஒரு கட்சிக்காக செயல்படுகிறார். அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என மனுதாரர் தரப்பில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் அந்த அதிகாரி இருப்பதாகவும் ஆகவே எந்த அச்சமும் மனுதாரர் கொள்ள வேண்டாம். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி யாராக இருந்தாலும் தேர்தல் நடவடிக்கையை பொறுத்தவரை சரியான முறையில் இயங்கவில்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தலை நியாயமாக நேர்மையாக நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. கடைசி நேரத்தில் காவல்துறை அதிகாரியை இடமாற்றம் செய்ய உத்தரவிட முடியாது'  எனக் கூறி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வந்தனர். 

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.