Skip to main content

'அரசுப்பள்ளினா அப்படித்தான் இருக்கும்...' தலைமை ஆசிரியரை கண்டித்து பள்ளிக்கு பூட்டுப்போட்டு மக்கள் போராட்டம்!

Published on 26/11/2019 | Edited on 26/11/2019

இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகரம் அண்ணாநகர் மாசாப்பேட்டையில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 110 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாடம் நடத்த தலைமையாசிரியர் கீதா தலைமையில் 3 ஆசிரியைகள், 4 ஆசிரியர்கள் என 7 பேர் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த காலத்தில் இந்த பள்ளியில் 400க்கும் அதிகமானவர்கள் படித்துள்ளனர். அதன்பின் படிப்படியாக குறைந்துள்ளது. அதற்கு காரணம், பள்ளியை சுத்தமாக பராமரிக்காதது என குற்றம் சாட்டுகின்றனர் அப்பகுதி பொதுமக்கள். அதோடு, குடிநீர் தொட்டியை கூட சுத்தம் செய்வதில்லை, கழிப்பறை வசதி சரியாக செய்யவில்லை. இதுப்பற்றி தலைமையாசிரியர் கீதாவிடம் முறையிட்டபோது, அவர் நக்கலாக அரசு பள்ளினா அப்படித்தான் இருக்கும் போங்கன்னு மோசமா பேசியுள்ளார்.

 

 People's struggle to lock down school

 

கடந்த சுதந்திர தினத்தின்போது, காலையில் ஏற்றியகொடி மறுநாள் மதியம் தான் இறக்கினார் தலைமையாசிரியர் கீதா. இதுப்பற்றி இந்த பகுதி முக்கியஸ்தர்கள் கேட்டபோது, கொடி இறக்காததால இப்ப என்ன குடி மூழ்கிடுச்சின்னு கேட்டாங்க.

இதுப்பற்றியெல்லாம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதனால் தான் பள்ளியை பூட்டி போராட்டம் நடத்துகிறோம் என்றார்கள். காலை 9 மணிக்கே பள்ளியின் வெளிப்புற கேட்டை பூட்டி மாணவர்களோடு சேர்ந்த அப்பகுதி பொதுமக்கள் போராடினர். தன்னை கண்டித்து போராட்டம் நடைபெறுகிறது என்றதும் பள்ளிக்கு வந்துக்கொண்டுயிருந்த தலைமையாசிரியர் கீதா, அப்படியே திரும்பி வீட்டுக்கு போனவர், நான் அரைநாள் விடுமுறை என சக ஆசிரியர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

 

 People's struggle to lock down school

 

ஆற்காடு நகர போலீஸார் வந்து சமாதானம் பேசியும் போராட்டத்தை கைவிடவில்லை. பின்னர் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல, அதன்பின் மாவட்ட கல்வி அலுவலர் வந்து, பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளார். விசாரணை விபரத்தை மாவட்ட கல்வி அலுவலர் மார்ஸ்சிடம் வழங்கி, அது மேலதிகாரிகளுக்கு சென்றபின்பே நடவடிக்கை என்ன என்பது தெரியும். அதுவரை பள்ளியை திறந்து நடத்த அனுமதியுங்கள் என பொதுமக்களிடம் பேச அவர்களும் சரியென்றுள்ளனர்.

இதேபோல், வேலூர் மாவட்டம், கணியம்பாடி அருகேயுள்ளது துத்திக்காடு கிராமம். இந்த கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். போதிய ஆசிரியர்கள் இல்லையென அப்பகுதி பொதுமக்களும் பள்ளியை பூட்டி போராட்டம் நடத்தியுள்ளனர். அதிகாரிகள் கண்டுக்கொள்ளாததால் சாலைமறியல் செய்தபின்பே அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நில உட்பிரிவு மாற்ற லஞ்சம்; நில அளவையாளர் கைது

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
3000 bribe to change land subdivision; Land surveyor arrested

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அலுவலகத்தில் நில அளவையாளராக பணியாற்றி வருபவர் 26 வயதான இளைஞர் அரவிந்த். அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் (43) வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டு மனை வாங்கி கடந்த 9.2.2024 ஆம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளார். அந்த வீட்டுமனையை உட்பிரிவு செய்வதற்காக நில அளவையாளர் அரவிந்தை அணுகியுள்ளார். அப்பொழுது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டு வந்துள்ளார்.

வீட்டு மனை பத்திரப்பதிவு செய்யும்போதே உட்பிரிவு செய்வதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்தியுள்ளனர். அப்படியிருந்தும் தனக்கு 5 ஆயிரம் லஞ்சம் வேண்டும் எனக் கேட்டுள்ளார். பணம் தந்தால்தான் அளவீடு செய்து பெயர் மாற்றித் தருவேன் என்றுள்ளார். வயது வித்தியாசம் பார்க்காமல் தன்னை அலுவல் ரீதியாக சந்திக்க வரும் பொதுமக்களை ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. சுதாகரையும் அப்படி பேசியதால் கடுப்பாகியுள்ளார்.

இதனால் மார்ச் 25 ஆம் தேதி, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் தந்துள்ளார். புகாரைப் பதிவு செய்துகொண்டு 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை தந்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்தை அவரும் கொண்டு சென்று வழங்கியுள்ளார். அதை வாங்கி அவர் தனது பாக்கெட்டில் வைத்ததை உறுதி செய்து கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.