Skip to main content

கீழே விழுந்த மக்கள் நீதிமய்யம் கட்சி கொடி!! நடிகை ஸ்ரீபிரியா அதிர்ச்சி!!

Published on 19/08/2018 | Edited on 19/08/2018
s

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  வத்தலக்குண்டில் மக்கள் நீதி மையத்தின் கொடியேற்று விழாவிற்கு வந்திருந்த தென்மண்டல  பொறுப்பாளர் ஸ்ரீப்ரியா மீது கொடி அவிழ்ந்து விழுந்ததால் அதிர்ச்சியடைந்தார்.  பின்னர் காத்திருந்து கொடி ஏற்றினார்.

 

திண்டுக்கல் மாவட்டத்தில்  உள்ள  வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே மக்கள் நீதி மையத்தின் புதிய கிளைக்காக கொடி ஏற்றி வைக்க ஒன்றிய பொறுப்பாளர் மனோதிபன் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்கள் செந்தில் ராஜசேகர் முன்னிலையில் தென்மண்டல பொறுப்பாளர்கள் நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் கவிஞர் சினேகன் ஆகியோர் விழாவிற்கு வந்தனர்.

 

s


 இப்படி வந்த நடிகை ஸ்ரீபிரியாவுக்கு பட்டாசு கொழுத்தி வெடி வெடித்து கட்சிகாரர்கள் வரவேற்றனர்.  அதன்பின்  கொடியேற்றுவதற்காக நடிகை ஸ்ரீபிரியாவை அழைத்துச் சென்றனர். அப்போது கொடியேற்ற கயிற்றை அவிழ்த்து ஏற்றும் போது பாதியில் கொடி கயிற்றுடன் மொத்தமாக அவிழ்ந்து ஸ்ரீபிரியாவின் மீது விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை ஸ்ரீபிரியா எவ்வளவு நேரம் ஆனாலும் கொடியேற்றி விட்டுத்தான் செல்வேன். உடனடியாக கொடியை மீண்டும் ரெடி பண்ண சொல்லிவிட்டு டீ கடையில் அமர்ந்திருந்தார். உடனடியாக கவிஞர் சினேகன் உதவியுடன் ஸ்பானரைக் கொண்டு கொடிக்கம்பத்தை முழுவதுமாக கழற்றி எடுத்து மீண்டும் கொடியினைக் கட்டி கம்பத்தை நட்டனர். அதன் பின்  சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் ஸ்ரீபிரியா கொடியேற்றினார்.

 

 பின்னர் பேசிய நடிகை ஸ்ரீபிரியாவோ... தேர்தல் நேரத்தில்  நல்லவர்களுக்கு வாக்களியுங்கள். புதிய ஆட்சி மலர மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் நீதி மையத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.

 அதன் பின் அருகேயுள்ள கோவில்பட்டிக்கு சென்று கொடி யேற்றினார்.  அப்பொழுது சுமார்300க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு வந்து நடிகை ஸ்ரீபிரியாவை வரவேற்றனர். அதன்பின் அங்கேயும் மக்கள் நீதி மய்யத்தின் கொடியை ஏற்றி வைத்து விட்டு புறப்பட்டார்.

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story

கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார விவரம் வெளியீடு!

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Kamal Haasan election campaign details release

நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் (22.03.2024) திருச்சி சிறுகனூரில் நடைபெற்ற பிரச்சார பொது கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு திருச்சி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோவையும், பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண் நேருவையும் ஆதரித்து வாக்கு சேகரித்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை வண்ணாங்கோயில் என்ற இடத்தில் பரப்புரையை தொடங்க உள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யத்தின் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மார்ச் 29 ஆம் தேதி ஈரோட்டிலும், மார்ச் 30 ஆம் தேதி சேலத்திலும், ஏபரல் 2 ஆம் தேதி திருச்சியிலும், 3 ஆம் தேதி சிதம்பரத்திலும், 6 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சென்னையிலும், 7 ஆம் தேதி சென்னையிலும், 10 ஆம் தேதி மதுரையிலும், 11 ஆம் தேதி தூத்துக்குடியிலும், 14 ஆம் தேதி திருப்பூரிலும், 15 ஆம் தேதி கோயம்புத்தூரிலும், 16 ஆம் தேதி பொள்ளாச்சியிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.