Skip to main content

திமுகவை மக்கள் வெறுத்துவிட்டனர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published on 18/03/2018 | Edited on 18/03/2018


திமுகவை மக்கள் வெறுத்துவிட்டதாகவும் அக்கட்சியை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ராஜினாமா செய்து விட்டு போவதே மேல் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று இரவு நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசியபோது,

காவிரி பிரச்சனையில் நாட்டை பாழாக்கியது அவர்கள் தான். காவிரி மேலண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனைத்து பணிகளையும் செய்தவர் ஜெயலலிதா. ஒரு துரும்பை கூட அள்ளி போடாதவர் கலைஞர்.

காவிரி மேலாண்மை அமைக்காவிட்டால் நாங்கள் ராஜினாமா செய்வோம் என்று இன்று கூறுகிறார்கள். மக்கள் உங்களை வெறுத்து விட்டார்கள், ராஜினாமா செய்துவிட்டு செல்வது நல்லது என அவர் கூறினார்.

சார்ந்த செய்திகள்