சென்னையில் இன்று காலைமுதல்மெட்ரோ ரயில் இயக்குவதற்கான அனுமதியை தமிழக அரசு அளித்தது.
ஊரடங்கு தளர்வுகளில் வரும் 7 -ஆம் தேதிமுதல் மெட்ரோ ரயில்களை இயக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விமானநிலையம் வரை இன்று மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது. அரசு வழிகாட்டு நெறிமுறைகள்படியே நிலையத்திற்குள் செல்வதற்குமுன் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்துகிருமி நாசினி வழங்கப்பட்டது.மேலும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றி மக்கள் பயணம் செய்தனர்.