Skip to main content

வீடு தேடிச் சென்று மருத்துவ உதவி...  மருத்துவ குழுவை பாரட்டும் மக்கள்

Published on 07/04/2020 | Edited on 07/04/2020

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதியில், தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ், குறிச்சி, காலகம், பின்னவாசல் ஆகிய சுகாதார நிலையங்கள் உள்ளன.


இங்கு ஆயிரக்கணக்கான ரத்தக்கொதிப்பு, சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு இ.சி.ஜி., ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை செய்யப்பட்டு இலவச மருந்து, மாத்திரைகள் மற்றும் தொடர் கண்காணிப்பு வழங்கப்பட்டு வந்தது.

 

 People who go home looking for medical help ... people who appreciate the medical team


தற்போது கரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பேருந்துகள் இல்லாததாலும், வெளியில் செல்ல முடியாத நிலை இருப்பதாலும், முதியோர்கள், நோயாளிகள் கடந்த 15 தினங்களாக அவதிப்பட்டு வந்தனர்.
 

nakkheeran app



இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ம. கோவிந்தராவ் உத்தரவின் பேரிலும், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ரவீந்திரன் அறிவுறுத்தலின் பேரிலும், பேராவூரணி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் தலைமையிலான மருத்துவக் குழுவினர், பேராவூரணி அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம், துலுக்கவிடுதி, ஒட்டங்காடு, துறவிக்காடு, புனல்வாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடு தேடிச் சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

 

 People who go home looking for medical help ... people who appreciate the medical team


இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் கூறுகையில், " பேராவூரணி வட்டாரத்தில் 1,127 ரத்தக்கொதிப்பு, சர்க்கரை மற்றும் இதய நோய் உள்ளவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது ஊரடங்கு உத்தரவால், பொதுமக்கள் சிகிச்சைக்கு வருவதில் உள்ள சிரமத்தை உணர்ந்து, வீடு தேடிச் சென்று சிகிச்சை அளித்து வருகிறோம்.

மொபைல் வாகனம் மூலம் இ.சி.ஜி. மெஷின், சர்க்கரை அளவு பரிசோதனை இயந்திரத்தை எடுத்துச் சென்று தேவைப்படுவோருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது. திங்கள்கிழமை அன்று மட்டும் 42 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு,  மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன், பெரியநாயகிபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் வத்சலா முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில், இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்து, மாத்திரைகள், மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

மேலும், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கியுள்ளோம். இம்மாதத்தில், பிரசவிக்க உள்ள கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  அரசு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நோயாளிகளை தேடிச் சென்று மருத்துவ உதவி அளித்து வருகிறோம்" என்றார்.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜனுடன், டாக்டர் தீபா, டாக்டர் வெங்கடேஷ், மற்றும் மருத்துவ அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திர சேகரன், சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், ஆய்வக நுட்புநர்கள், மருத்துவ பணியாளர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்டோர் கரோனா வைரஸ் பீதியிலும், மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருவதை பொதுமக்களும், நோயாளிகளும் பாராட்டி உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது தாக்குதல்; விசாரணையில் வெளியான பகீர் தகவல்! 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Govt Bus Driver Conductor incident information released in the investigation

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய பாலக்கரை பகுதியில் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகரப் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது 8 பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று இந்த பேருந்தை வழிமறித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுட்டனர். மேலும் ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்துக்குள் சென்று ஓட்டுநரை தகாத வார்த்தைகளால் திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநரை பேருந்துக்கு வெளியே இழுத்து வந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற நடத்துநர் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அருகில் இருந்தவர்கள் இதனை தடுக்க முயன்ற போது இந்த இளைஞர்கள் அவர்களையும் தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து தாக்கியுள்ளனர். அதே சமயம் அந்த வழியே வந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் இருவர் இந்த சம்பவத்தை படம் எடுத்தபோது அவர்களையும் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் இருவர் என 4 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். 6 பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரும் கஞ்சா போதையில் இருந்தனர் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.  இத்தகைய சூழலில் மேலும் 4 பேரை  போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

ஆடு மேய்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; அச்சத்தில் உறைந்த கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
The cruelty that happened to the woman who went to herd the goats; Villagers frozen in fear

தஞ்சாவூரில் ஆடுகளை மேய்க்கச் சென்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அடுத்துள்ளது மனையேறிப்பட்டி. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 48 வயது பெண் ஒருவர், கருமம்குளம் பகுதியில் ஆடுகளை எப்பொழுதும் மேய்ச்சலுக்குக் கொண்டு செல்வது வாடிக்கை. அதன்படி நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்ற நிலையில் மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் காணாமல் போனவரைத் தேடி உறவினர்கள் குளக்கரை பகுதிக்குச் சென்றுள்ளனர். அப்பொழுது அப்பெண்ணின் செருப்பு மற்றும் அவர் உணவு எடுத்து வந்த பாத்திரம், தண்ணீர் பாட்டில் ஆகியவை மட்டும் தரைப்பகுதியில் கிடந்தது.

இதனால் சந்தேகமடைந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேடிய பொழுது அப்பெண் ஆடைகள் களையப்பட்ட நிலையில் ரத்த காயத்துடன் சடலமாகக் கிடந்தார். பின்னர், உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருவேளை அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அச்சத்தையும்  ஏற்படுத்தி இருக்கிறது.