Skip to main content

பாபநாசத்தில் பாவத் துணிகளை எடுத்து உடுத்தும் மக்கள்!

Published on 21/01/2020 | Edited on 21/01/2020

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசம் என்பது பாவங்களைக் அழிக்கக்கூடிய புனித நகராக விளங்கிவருகிறது. இப்படிப்பட்ட பாபநாசத்திற்கு தமிழகத்திலுள்ள மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருச்சி, கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், விழுப்புரம், சென்னை உள்பட பல நகரங்களிலிருந்தும், பட்டி தொட்டிகளில் இருந்தும் தினசரி ஐநூறுக்கு மேற்பட்ட மக்கள் வந்து சடங்கு, சம்பிரதாயங்களை செய்துவிட்டுப் போகிறார்கள்.

 

People who dress in sinful clothes


இதற்காக அங்குள்ள அய்யர்கள் மூலமாக தோஷங்கள் நீங்குவதற்காகவும், முன்னோர்களின் பாவம் போக்கவும், அதுபோல் தாய் தந்தைக்கு திதி கொடுப்பதும், தடைகள் போக்குவதற்கும், திருமணத் தடைகள் நீக்குவதற்கும், முன்னோர்களை எண்ணி எள்ளு தண்ணி  இறைப்பது,  இப்படி சில சடங்கு சம்பிரதாயங்களை செய்கிறார்கள். இந்த சடங்கு சம்பிரதாயங்கள் செய்யும் பொதுமக்கள் தங்கள் கட்டியிருக்கும் வேஷ்டி, சேலை, பேண்ட், சுடிதர் போன்ற துணிகளை அந்த பரிகார பூஜை முடிந்தவுடன் அருகே ஓடும் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு அப்படியே ஆற்றிலே விட்டுவிட்டு மாற்று துணி கட்டிக் கொள்கிறார்கள்.

இதனால் தாமிரபரணி ஆறும் மாசுபட்டு போகிறது.  தாமிரபரணி ஆற்றுத் தண்ணீரை தான் திருநெல்வேலியில் உள்ள பெரும்பாலான மக்களுக்கும் குடித்து வருகிறார்கள். அதோடு விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் பாபநாசத்துக்கு வரும் மக்கள் ஆற்றில் குளிக்கும் போது தங்கள் கட்டியிருக்கும் துணிமணிகளை ஆற்றில் விடக் கூடாது என்றும், அந்த துணிகளை அருகே உள்ள தொட்டியில் போட வேண்டுமென மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில்தான் பாபநாசத்தில் உள்ள போலீஸாரும் அங்கு வரும் மக்களிடம் தங்கள் உடுத்தியிருக்கும்  துணிகளை ஆற்றில் விடக்கூடாது அருகில் உள்ள தொட்டியில் போட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் பாபநாசத்துக்கு வரும் பெரும்பாலான மக்கள் தங்கள் பரிகார பூஜைகளை செய்து விட்டு அப்படியே தாமிரபரணி ஆற்றில் இறங்கி  நீராடிவிட்டு அந்த துணிகளையும் ஆற்றிலையே  விட்டுவிடுகிறார்கள். பலர்   தொட்டிகளிலும், பாறை  திட்டுகளிலும்  போட்டுவிட்டு  போய்  விடுகிறார்கள்.  அதன்பின் அருகே உள்ள சிவபெருமானை வணங்கி விட்டு சொந்த ஊர்களுக்கு சென்று விடுகிறார்கள்.

 

People who dress in sinful clothes


இப்படி பாவ காரியங்களை கழிக்க வரும் மக்கள் ஆற்றில் விடும் துணிகளையும், தொட்டியில் போடும் துணிகளையும் அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் எடுத்து உடுத்துவதும், சிலர் அந்தத் துணிகளை பைகளில் எடுத்து சென்று பழைய துணி வியாபாரிகளிடம் போட்டு பணம் பார்ப்பதுமாக இருந்து வருகிறார்கள்.

பரிகார பூஜைகளில் கலந்துகொண்டு விட்டு  அந்தத் துணிகளை தாமிரபரணி ஆற்றிலும், அதன் அருகே இருக்கும் தொட்டி மற்றும் பாறை மேல் போடுவதை யாரும் எடுக்கக்கூடாது என்று நகராட்சி மூலம் வலியுறுத்தப்பட்டும் வருகிறது. அதோடு நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் அந்த துணிகளை எடுத்து மூட்டை மூட்டையாக கட்டி வைத்து பத்து நாட்களுக்கு ஒரு முறை அந்தத் துணிகளை எடுத்துச்சென்று உரக் கிடங்குகளில் போட்டு விடுகிறார்கள். அந்த அளவுக்கு துப்புரவு பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள் .அதையும் மீறித்தான்  அப்பகுதியில் இருக்கக் கூடிய சில மக்களும், சுற்று வட்டாரங்களில்  இருக்க கூடிய பலரும் அந்த துணி மணிகளை எடுத்து கொண்டு போய்  உடுத்தியும், விற்பனை செய்தும் வருகிறார்கள்.

இதை  போலீசார்தான் தடுக்க வேண்டும் என பாவ தோஷங்களை நீக்க வரும் மக்களே வலியுறுத்தி வருகிறார்கள். 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானில் பழங்கால இந்து கோவில் இடித்து தகர்ப்பு!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
Demolition of a Historic Hindu temple in Pakistan!

இந்தியா - பாகிஸ்தான் பிரிவதற்கு முன்னாள், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையொட்டி, கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ‘கைபர் கோவில்’ என்ற பழங்கால இந்து கோவில் ஒன்று செயல்பட்டு வந்தது. அதன் பின்பு, 1947ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததற்குப் பின்னால், அங்குள்ள சிறுபான்மையின மக்களான இந்து மக்கள், இந்தியாவிற்கு புலம் பெயர்ந்து வந்தனர்.

இதனால், 1947ஆம் ஆண்டு முதல், அந்த இந்து கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் உள்ளே சென்று வழிபடவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த கோவில் மூடப்பட்டுள்ளது. காலப்போக்கில் இந்த கோவிலில் உள்ள செங்கற்கள் ஒவ்வொன்றாக விழுந்து, அந்த கோவில் சிதிலமடைந்து காட்சியளித்துள்ளது.

இந்த நிலையில், அந்தப் பழமையான இந்து கோவில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கோவில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் இந்து கோவில் நிர்வாகக் குழு கூறியதாவது, ‘முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மத முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்று கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் மறுசீரமைப்பை உறுதி செய்வது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளின் பொறுப்பாகும்’ என்று கூறியுள்ளது.

Next Story

தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Andhra Pradesh Kurnool car festival incident

தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.