Skip to main content

ஆதாரத்துடன் முறையிட்ட மக்கள்! அதிகாரி உடனடி சஸ்பெண்ட்! 

Published on 13/05/2022 | Edited on 13/05/2022

 

People who appealed with evidence! Officer immediately suspended!

 

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கண்ணியம் கிராமத்தில் ரோடு போடாமல் பணம் கையாடல் செய்ததாக அதிகாரிகள் மீது ஆதாரங்களுடன் கிராம மக்கள் குற்றச்சாட்டு கூறி போராட்டம் நடத்தினர். 

 

இதில் குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தில் இறந்து போனவர்களின் பெயரில் வேலை செய்ததாக பணம் கையாடல் செய்துள்ளதாக மக்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வைத்தனர். இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் மோகன் உரிய விசாரணை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அந்த விசாரணையில், தார் சாலை அமைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரம்மாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதனை கண்காணிக்கத் தவறியதாக வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக வட்டார வளர்ச்சி அலுவலகம் கணினிப் பிரிவில் பணிபுரியும் ஆப்பரேட்டர் பாலு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

 

இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன் இன்னும் 2 மாதத்தில் ஓய்வு பெற உள்ளார். ஓய்வு பெறும் சமயத்தில் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்ய கூடாது என்ற காரணத்தினால் அவரை பணியிலிருந்து விடுவித்து உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பகல் 12 முதல் 3 வரை வெளியே வர வேண்டாம்’ - மதுரை மக்களுக்கு அறிவுறுத்தல்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Advice to Madurai people Don't come out between 12 noon and 3 am

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாவட்ட மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “வெயில் அதிகரிப்பு காரணமாக மதுரையில் பகல் 12 மணி முதல் 3 மணி வரை மக்கள் வெளியே வர வேண்டாம். வெயில் தாக்கம் மற்றும் அனல்காற்று அதிகமாக வீசுவதால் மக்கள் முன்னெச்சரிக்கயாக இருக்க வேண்டும்.

அதாவது, வெயிலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் கால்நடைகளை அனுமதிக்கக் கூடாது. தாகம் எடுக்காவிட்டாலும் போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். பழச்சாறுகள் அருந்த வேண்டும். அவசர கால தேவைகளுக்கு 1077 மற்றும் 1070 ஆகிய இலவச அழைப்பு எண்களை தொடர்பு கொள்ளலாம்” எனத் தெரிவித்தார். 

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார்.