Skip to main content

தலைவிரித்தாடும் குடிதண்ணீர் பஞ்சம்... புழுக்கள் நெளியும் தண்ணீரை வடிகட்டி குடிக்கும் கிராமமக்கள்

Published on 06/11/2019 | Edited on 06/11/2019


திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியம், வக்கம்பட்டி ஊராட்சி, செம்பட்டி-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் வக்கம் பட்டி, பழைய வக்கம்பட்டி, தெற்கு தெரு,எம்.ஜி.ஆர்.நகர், மாதா நகர், உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. குறிப்பாக வக்கம்பட்டி ஊராட்சியில் குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுவதாலும், ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிதண்ணீரை எடுத்துவிடாமல் இருப்பதால் முப்பது முதல் நாற்பது நாட்களுக்கு ஒருமுறைதான் குடிதண்ணீர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

 

The people of the village are worried about drinking water

 

இதனால் பொதுமக்கள் குடிப்பதற்காக ஊராட்சி நிர்வாகம் மூலம் விநியோகம் செய்யப்படும் குடிதண்ணீரை 200 லிட்டர் பிளாஸ்டிக் டிரம்களில் பிடித்து வைத்து பயன்படுத்துகின்றனர். இதனால் டிரம்களில் புழுக்கள் உண்டாகி வருகின்றன. பொதுமக்கள் துணி மூலம் புழுக்களை வடிகட்டி பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளனர். குறிப்பாக தெற்குதெரு பகுதியில் சாலை முழுவதும் நூற்றுக் கணக்கான டிரம்கள் தெருக்களை அடைத்தது போல் உள்ளன. மேலும் அப்பகுதியில் உள்ள வடிகாலை சுத்தம் செய்ய ஊராட்சி நிர்வாகம் சார்பாக யாரும் வருவதில்லை. பெரும்பாலும் ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டியே கிடப்பதால் பொதுமக்கள் புகார் செய்ய முடியாத நிலை உள்ளது.

 

The people of the village are worried about drinking water


இது குறித்து வக்கம்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்த ஸ்டெல்லாமேரி கூறுகையில், இப்பகுதியில் சாக்கடை நீர் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி பலருக்கு மர்மக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ஆய்வுக்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்ரமணியனின் காலை பிடித்து கெஞ்சியும் கூட எங்களுக்கு நாற்பது நாட்களுக்கு ஒருமுறைதான் குடிக்க தண்ணீர் வருகிறது. அதனால் நாங்கள் டிரம்களில் பணம் கொடுத்து வாங்கி பிடித்து வைக்கும் தண்ணீர் புழு வைத்தாலும் கூட நாங்கள் அதை பயன்படுத்தும் நிலையில் உள்ளோம் என கண்ணீர் மல்க கூறினார். இதுகுறித்து நாங்கள் புகார் செய்தாலோ அல்லது மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குநரிடம் கூறினாலோ நாற்பது நாட்களுக்கு ஒருமுறை வருகின்ற தண்ணீரையும் நிறுத்தி விடுவோம் என ஊராட்சி நிர்வாகத்தினர் மிரட்டுகின்றனர். என்றார்.

 

The people of the village are worried about drinking water

 

தெற்கு தெருவை சேர்ந்த அங்கயற்கண்ணி மற்றும் தனலெட்சுமி கூறுகையில், பலமுறை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி செயலர் பால்ராஜிடம் புகார் செய்தும் அதை கண்டுகொள்வதில்லை. நாங்கள் தினசரி கூலி வேலைக்கு வெளியூர் சென்று விட்டு திரும்ப வரும்போது ஊராட்சி மன்ற அலுவலகம் பூட்டிக்கிடக்கும் இதனால் நாங்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்துகிறோம். புழுக்கள் மிதந்தாலும் வடிகட்டி பயன்படுத்தும் அவலநிலையில் உள்ளோம் மேலும் இப்பகுதியில் சாக்கடைகளை முறையாக சுத்தம் செய்யாததால் பலருக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது என்றார்.  மாவட்ட ஆட்சியர் ஒருமுறையாவது எங்கள் வக்கம்பட்டி தெற்குதெரு பகுதிக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தால்தான் எங்களின் குடிதண்ணீர் கஷ்டம் தெரியும் என கண்ணீர் மல்க கூறினார்கள்.

 

The people of the village are worried about drinking water

 

தமிழகம் முழுவதும் டெங்கு புழுக்களை கட்டுப்படுத்துங்கள் என தமிழக அரசு அறிவித்து வரும் நிலையில் வக்கம்பட்டி ஊராட்சி கிராம மக்கள் புழுக்கள் மிதக்கும் தண்ணீரை குடிக்கும் அவலநிலையில் உள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.