Skip to main content

“நீட் எப்போது யாரால் வந்தது என்பது மக்களுக்கு தெரியும்” - அமைச்சர் மா.சு. பேட்டி 

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

The people of Tamil Nadu know when NEET is given by whom - Minister M. Su interview

 

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 13வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்று 101 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “2016 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை. 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த  பிறகுதான் நீட் உள்ளே வந்தது. இந்த நீட் தேர்வு வருவதற்கு முழு காரணமே எடப்பாடி பழனிசாமி தான். நீட் தேர்வால் 21 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.

 

நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்ததற்காக ஏதோ ஒரு காரணத்தை எடப்பாடி பழனிசாமி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீட் எப்போது யாரால் வந்தது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். 2011 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வு வந்தபோது அதனைத் தடுத்து நிறுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். இதற்காக அவர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றார். அதன் வழியில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் பேரில் நீட் தேர்வு விலக்கு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு நன்கு தெரியும்.

 

கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவத்துறை பல்வேறு சாதனை படைத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தை திருட்டு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டின் போது கவனக்குறைவாக இருந்த தற்காலிக பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்போது அந்த வார்டில் பணியில் இருந்த மருத்துவ பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

 

நடப்பு நிதி ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டமான ஒவ்வொரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் புற நோயாளிகள் பிரிவு நுழைவு வாயிலில் தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக வேலூரில் இன்று துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் விரைந்து செயல்படுத்தப்படும். இந்த திட்டமானது நுழைவாயிலில் நுழையும் அனைத்து நோயாளிகளுக்கும் எடை, உயரம், நாடித்துடிப்பு, நடுக்கை சுற்றளவு, சுவாச வீதம், ரத்த அழுத்தம்,  ரத்தசோகை, சர்க்கரை உள்ளிட்ட பல நோய்களுக்கு அளவீடு செய்யப்பட்டு மருத்துவர்கள் பார்ப்பதற்கு முன்பாகவே நோயாளிகளின் பரிசோதனைகளின் அடிப்படையில் முதலில் அறிக்கை அவர்களிடம் தரப்படும்.

 

இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தற்போது தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் வெளிப்படைத்தன்மையாக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 1,021 மருத்துவர்களும், 983 மருந்தாளுநர்களும், 1,066 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதில் கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் 5 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவரவர்களுக்கு தகுந்த வகையில் மதிப்பெண் அளிக்கப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.