வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 13வது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பங்கேற்று 101மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “2016 ஆம்ஆண்டுஅதிமுகஆட்சியில் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை. 2017 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்தபிறகுதான்நீட்உள்ளேவந்தது.இந்த நீட் தேர்வு வருவதற்கு முழுகாரணமேஎடப்பாடி பழனிசாமி தான். நீட் தேர்வால் 21 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான்.
நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்ததற்காக ஏதோ ஒரு காரணத்தை எடப்பாடி பழனிசாமி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.நீட்எப்போதுயாரால் வந்தது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். 2011 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வு வந்தபோதுஅதனைத்தடுத்து நிறுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர். இதற்காக அவர் நீதிமன்றம் சென்றுதடையாணைபெற்றார். அதன் வழியில் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில்குழு அமைத்து அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் பேரில் நீட் தேர்வு விலக்கு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு நன்கு தெரியும்.
கடந்த இரண்டு ஆண்டுகளில்மருத்துவத்துறை பல்வேறு சாதனை படைத்துள்ளது.அரசு மருத்துவமனைகளில் குழந்தை திருட்டு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தைதிருட்டின்போதுகவனக்குறைவாகஇருந்த தற்காலிக பணியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அப்போது அந்த வார்டில் பணியில் இருந்த மருத்துவ பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டமானஒவ்வொருமருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் புறநோயாளிகள்பிரிவு நுழைவுவாயிலில்தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது. முதன்முதலாக வேலூரில் இன்று துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும்விரைந்து செயல்படுத்தப்படும். இந்த திட்டமானதுநுழைவாயிலில்நுழையும் அனைத்து நோயாளிகளுக்கும் எடை, உயரம்,நாடித்துடிப்பு, நடுக்கை சுற்றளவு, சுவாச வீதம், ரத்த அழுத்தம்,ரத்தசோகை, சர்க்கரை உள்ளிட்ட பல நோய்களுக்கு அளவீடு செய்யப்பட்டு மருத்துவர்கள் பார்ப்பதற்குமுன்பாகவேநோயாளிகளின் பரிசோதனைகளின் அடிப்படையில் முதலில் அறிக்கை அவர்களிடம் தரப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தற்போது தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ளது. மருத்துவத் துறையில் வெளிப்படைத்தன்மையாக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுவருகின்றனர். 1,021 மருத்துவர்களும், 983மருந்தாளுநர்களும், 1,066 சுகாதார ஆய்வாளர்கள்பணியிடங்களைநிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதில் கரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் 5 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவரவர்களுக்கு தகுந்த வகையில் மதிப்பெண் அளிக்கப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.